கன்னியாகுமரியில் காதலனுடன் வீட்டிற்குள் தனிமையில் மாணவி.. தட்டி கேட்ட தந்தைக்கு பெரிய ட்விஸ்ட்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே காதலனுடன் ஒரே அறையில் ஜாலியாக இருந்ததை தந்தை கண்டித்துள்ளார். மகள் என்றும் பாராமல் அவர் கையும் களவுமாக பிடித்து, ஊர்மக்களிடம் அம்பலப்படுத்தினார். அத்துடன் அவர்களை காவல் நிலையத்திலும் ஒப்படைத்தார். 17 வயதே ஆன மகளிடம் காவல்துறை விசாரித்த போது, தந்தை மீதே அத்துமீறல் புகார் அளிப்பேன் என மிரட்டல் விடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோணங்காடு பகுதியை சேர்ந்த கொத்தனாருக்கு 17 வயதில் ஒரு மகளும், 13 வயதில் மகனும் இருக்கிறார்கள். இதில் மகள் பிளஸ்-2 படித்து வருகிறார். கொத்தனாரின் மனைவி இவரை விட்டு பிரிந்து வேறு ஒருவருடன் வசித்து வருகிறார். இதனால் கொத்தனார் தனது மகள் மற்றும் மகனை தனியாக வளர்த்து வருகிறார். இவர் கட்டுமான தொழில் செய்வதால், அடிக்கடி வெளியூர் சென்று வேலை செய்து வருவாராம். தற்போது கேரள மாநிலத்தில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்.

17 வயதில் காதல்
கொத்தனாரின் 17 வயது மகளும், ஒரு இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இதை அறிந்த கொத்தனார் மகளை கண்டித்துள்ளார். ஆனால், மகள் தந்தையின் பேச்சை மதிக்கவில்லை.. அப்படித்தான் காதலிப்பேன் என்ற தொனியில் நடந்து கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கொத்தனார் கேரளாவில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். அப்போது உள்புறமாக பூட்டப்பட்டிருந்த வீட்டுக்குள் அவரது மகள், காதலனுடன் தனிமையில் காதல் லீலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்களாம்.
கதவை பூட்டினார்
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கொத்தனார் அக்கம் பக்கத்தினரிடம் நடந்த சம்பவங்களை கூறி வெளிப்பக்கமாக கதவை பூட்டினார். அக்கம் பக்கத்தினர். கதவை திறந்து கொத்தனாரின் மகளின் காதலனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் குளச்சல் அருகே உள்ள கொத்தனார்விளையை சேர்ந்தவர் என்பதும் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதாக கூறியிருக்கிறார்.
உங்கள் மீதே வழக்கு போடுவேன்
என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக கூறி உங்கள் (தந்தை) மீது நான் போக்சோ வழக்கு கொடுக்கிறேன் என போலீசாரிடம் கூறுவேன் என மிரட்டல் விடுத்தார். இதை கேட்டதும் கொத்தனார் மனம் உடைந்து போனார். பின்னர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க மறுத்து அவர், மகளை பார்த்து கலங்கி அழுதபடி திரும்பி சென்று விட்டார். இதையடுத்து மாணவியை எங்கே அனுப்புவது என்று யோசித்த போலீசார், தாயாரை தொடர்பு கொண்ட போலீசார் போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். அவருடன் மாணவியை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications