அடேய்.. வரனை சீர்குலைக்கும் கும்பல்களா.. ஒழுங்கா இருங்க.. பேனர் வைத்து வார்ன் செய்த வாலிபர்கள்
திருமண வரனை தடுத்து நிறுத்தும் இளைஞர்கள் பேனர் ஒன்றினை வைத்துள்ளனர்
கன்னியாகுமரி: "டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்துட்டு, டீயை குடிச்சிட்டு போகாம, எங்களுக்கு வர்ற கல்யாண வரனை எல்லாம் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று "சிங்கிள்ஸ்" அனைவரும் ஒரு புகார் தந்துள்ளனர். அத்துடன் ஒரு வயிற்றெரிச்சல் பேனரையும் ஊர் முழுக்க வைத்து விட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ளது புதுவிளை என்ற கிராமம். இந்த கிராமத்தில் நிறைய இளைஞர்களுக்கு கல்யாணம் ஆகவில்லை போலும். மாப்பிள்ளை கேட்டு யாருமே வரவும் இல்லை. இதனால் ரொம்ப நாளாக வரனுக்காக காத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அப்படியும் வரன் கேட்டு வரும் பெண் வீட்டாரிடம், சம்பந்தப்பட்ட மணமகன் பற்றி ஏடாகூடமாக சொல்லப்படுகிறதாம். இந்த வேலையை ஒரு கும்பலே பார்க்கிறதாம். இந்த கும்பல்தான், டீக்கடையில் உட்கார்ந்து கொண்டு, வரும் வரனை எல்லாம் தட்டி கழித்து விடுவதாக இளைஞர்கள் நினைக்கிறார்கள்.
அதனால் இப்படி புரளி கிளப்பி தங்களது கல்யாணத்தை தடுப்பதால், பாதிக்கப்பட்ட இளைஞர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு டிஜிட்டல் பேனரை வைத்துள்ளனர். அதில், திருமண வரன்களை தடுத்து நிறுத்தும் அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்று கூறப்பட்டுள்ளது. மேலும் "தங்கள் நற்பணி தொடருமாயின் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர், புகைப்பட ஆதாரத்துடன் வெளியிடப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைவிட ஹைலைட், "திருமண வரன்களை தடுப்பதற்கு முன் கூட்டியே தங்களிடம் தகவல் தெரிவித்தால் வாகன வசதி செய்து தரப்படும்" என்றும் இளைஞர்கள் பின்குறிப்பாக குறிப்பிட்டுள்ளார். இந்த பேனரில் உள்ள அத்தனை வரிகளிலும் இளைஞர்களின் வயிற்றெரிச்சல் நன்றாகவே தெரிகிறது. இந்த பேனர்தான் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
டீ கடை பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு இப்படி வரும் வரனை எல்லாம் தடுத்து நிறுத்தும் கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசிலும் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் தந்துள்ளார்களாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications