ரூம் போட்டோம்.. நெருக்கமா இருந்தோம்.. எல்லாம் போச்சு, ஏமாத்திட்டார்.. பேஷன் டிசைனர் பெண் புகார்
கன்னியாகுமரி: "ரூம் போட்டோம்.. நெருக்கமாக இருந்தோம்.. கடைசியில் என்னை ஏமாற்றி விட்டார்.. நகை, பணத்தையும் வாங்கி கொண்டார், நடவடிக்கை வேண்டும்" என்று ஃபேஷன் டிசைனர் பெண் ஒருவர் இளைஞர் மீது புகார் தந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பெருமாள்புரத்தில் வசித்து வந்த பெண்ணுக்கு 28 வயதாகிறது.. 2013-ல் இவருக்கு கல்யாணமாகி உள்ளது.. ஆனால் கணவனை 3 மாதங்களிலேயே பிரிந்து விட்டார்.. டைவர்ஸ் கேஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
ஃபேஷன் டிசைனராக இந்த பெண் வேலை பார்த்து வருகிறார்.. அப்போதுதான் கேபிள் நிறுவனம் நடத்தி வரும் லோகேஷ் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

வெளியூர்
ஃபேஸ்புக் நண்பர் அவர்.. அவருக்கும் 28 வயதாகிறது.. பெண்ணை மறுமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதை நம்பி, அந்த பெண்ணும் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.. அடிக்கடி வெளியூர்களுக்கும் சென்று ஜாலியாக இருந்து வந்துள்ளனர். இந்த சமயத்தில்தான், லோகேஷ் குமார் ஆபீஸ் வளர்ச்சிக்காக, பெண்ணிடம் 30 பவுன் நகைகளை வாங்கியுள்ளார்.

அதிர்ச்சி
பிறகு கார் வியாபாரம் செய்யப் போவதாக சொல்லி 5 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்... ஆனால், பணமும், நகையும் திருப்பி தரவும் இல்லை என தெரிகிறது... கடைசியில் கல்யாணமும் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் சொன்னாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார்.

மறுப்பு
அந்த புகாரில், "லோகேஷ் குமார் நெருங்கி பழகினார்.. ஆனால் கல்யாணம் செய்ய மறுத்துவிட்டார். நான் அவர் வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டதற்கு, லோகேஷ் குமாரும் அவரது அம்மா கீதா குமாரி, மாமா அய்யாசாமி, நண்பர் பிரதீப் ஆகியோர் சேர்ந்து என்னை தகாத வார்த்தைகளில் பேசி தாக்கினார்கள். பணம் மற்றும் நகையை நான் திருப்பி கேட்டதற்கு, என்னுடன் நெருக்கமாக இருந்தபோது எடுத்த போட்டோக்களையும், வீடியோக்களையும் சோஷியல் மீடியாவில் பரப்பி விடுவதாக லோகேஷ்குமார் மிரட்டினார்.

தலைமறைவு
எனவே, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து, மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து லோகேஷ் குமாரை கைது செய்தனர். ஆனால், அவரது அம்மா, மாமா, நண்பர் என 3 பேருமே தலைமறைவாக உள்ளதால் தேடி வருகிறார்கள்
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications