கரூரில் வாக்கு பதிவு மையத்தில திமுக அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் வாக்குவாதம்.. போலீசார் தடியடி
கரூர் :கரூரில் வாக்கு பதிவு மையத்தில திமுக அதிமுகவின் பூத் ஏஜெண்டுகள் இடையே ஒருமுதியவரின் வாக்கு தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாகும நிலை ஏற்பட்டது. .
இரு தரப்பிலும் இருந்து 100க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விரைந்து செயல்பட்ட போலீசார் இருதரப்பினர் மீதும் தடியடி நடத்தி கலைத்தனர்.

கரூரில் வாக்கு பதிவு மையத்தில் க்குச்சாவடி எண். 170ல் .முதியவர் ஒருவருக்கு ஓட்டுப் போடுவதில் திமுக அதிமுக இடையே பூத் ஏஜெண்டுகள் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது.

இரு தரப்பிலும் இருந்து 100க்கும் மேற்பட்டோர் சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அரை மணி நேரமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஏஎஸ்பி தலைமையில் அதிவிரைவுப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். இரண்டு கட்சிகள் சார்பில் காரியாலயம் பகுதியில் தேர்தல் பணியில் இருந்த கும்பலாக இருந்த பொதுமக்களை அதிவிரைவு படை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசாய் சாங் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்துபின் வாக்கு மையம் பொதுமக்களுக்கு வாக்களிக்கபடி ஏற்பாடு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications