மக்கள்தான் முதல்வர்... என்னை முதல்வராக நினைக்கவில்லை.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
கரூர்: மக்கள் தான் முதல்வர் என்றும் என்னை முதல்வராக நினைக்கவில்லை என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் மே 19ம் தேதி அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தளவாய் பாளையம், புன்னம் சத்திரம், எல்லமேடு, வேலாயுதம் பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வியாழக்கிழமை தீவிர பிரச்சாரம் செய்தார்.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், அரவக்குறிச்சியில் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து குளங்களும் தூர் வாரப்படும்.
அதிமுகவை உடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுடன் இணைந்து செந்தில் பாலாஜி இங்கு தேர்தலில் போட்டியிடுகிறார். 18 தொகுதி இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றிடுவோம் என கூறும் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஏன், சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவருகிறார்., இதற்கு தோல்வி பயம் தான் காரணம். இங்கு மக்கள் தான் முதல்வர். என்னை நான் என்றுமே முதல்வராக நினைக்கவில்லை" இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications