Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ. 350 கோடி வருவாய் மறைப்பு? 8 நாட்களாக நடந்த ஐ.டி ரெய்டில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்!

Subscribe to Oneindia Tamil

கரூர் : கரூரில் கடந்த 8 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை இன்று நிறைவடைந்தது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கணக்கில் வராத ரூ. 350 கோடி வருவாய் மறைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார், அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்கள் என அவர் சார்ந்த பலரது வீடுகள், அலுவலகங்கள், பண்ணை வீடுகள், ஆடிட்டர்களின் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி எதிரே உள்ள சுரேந்தர் மெஸ், அதன் மாடியில் உள்ள நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது. கரூர் துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது. அமைச்சர் செந்தி பாலாஜியின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் வீடு, அலுவலகம், பண்ணை வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

Important documents seized in it raid : Hidden revenue details discovered in the places related to senthil balaji

எட்டாவது நாளான இன்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள், நண்பர்கள் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே, கரூர் லாரி மேட்டில் உள்ள வழக்கறிஞர் செங்கோட்டையன் வீட்டில் சோதனை நடந்தது. அங்கிருந்து இரண்டு பெட்டிகளில் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் அதொடர்புடையோரின் இடங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த மே 26ஆம் தேதி 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை இன்று முடிவுக்கு வந்தது.

8 நாட்கள் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.3.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.350 கோடி வருவாய் மறைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் சமந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்ததை அடுத்து மாவட்ட காவல்துறை மூலம் வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். சீல் வைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 2 இடங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்குமாறு போலீசாருக்கு வருமான வரித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+