மேலிடத்து ஆசி! கரூரில் களமிறங்குவதில் ஜோதிமணி உறுதி! பரபரக்கும் லோக்கல் பாலிடிக்ஸ் பஞ்சாயத்து!
மேலிடத்து ஆசியுடன் மீண்டும் கரூரில் களமிறங்கும் திட்டத்தில் ஜோதிமணி.
கரூர்: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் கரூர் தொகுதியில் களமிறங்குவதில் ஜோதிமணி எம்.பி. மிக உறுதியாக இருக்கிறார்.
எக்காரணத்தை கொண்டும் தொகுதி மாற விரும்பாத அவர் இப்போதே ஃபெல்லோஷிப் அடிப்படையில் தன்னார்வலர்களை வைத்து தொகுதி மக்களின் பல்ஸை ஸ்கேன் செய்ய ஆரம்பித்துவிட்டார்.
அமைச்சர் செந்தில்பாலாஜியுடன் ஏற்பட்டுள்ள பனிப்போர் காரணமாக ஜோதிமணி திண்டுக்கல் தொகுதிக்கு தாவக்கூடும் எனக் கூறப்பட்ட நிலையில் அதனை அடியோடு திடமாக மறுக்கிறார் ஜோதிமணி.

2024 நாடாளுமன்றத் தேர்தல்
தமிழகத்தில் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரபரப்பு இப்போதே பற்ற ஆரம்பித்துள்ளது. ஒரு பக்கம் அதிமுக பாஜக கூட்டணி விவகாரத்தில் முக்கிய திருப்புமுனை ஏற்படவுள்ள நிலையில், திமுக காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காணும் பணிகள் தொடங்கியுள்ளன. இதனிடையே கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அடுத்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் உலா வந்தது.

ஜோதிமணி மறுப்பு
இதனை அடியோடு திடமாக மறுத்துள்ள ஜோதிமணி எம்.பி., கரூர் தொகுதியில் தான் மீண்டும் போட்டி என்பதில் மிக உறுதியாக இருக்கிறார். அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் இவருக்கும் பனிப்போர் நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் மேலிடத்தின் பரிபூரண ஆசியை பெற்றிருப்பதால் லோக்கல் பாலிடிக்ஸை பற்றி அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இதனால் தொகுதி மாறும் பேச்சுக்கே இடமில்லை எனக் கூறி வரும் ஜோதிமணி, தேர்தல் பணிகளையும் சத்தமின்றி தொடங்கிவிட்டார்.

கரூர் மக்களவைத் தொகுதி
ஃபெல்லோஷிப் அடிப்படையில் தன்னார்வலர்களை வைத்து தொகுதி மக்களின் பல்ஸை ஸ்கேன் செய்ய ஆரம்பித்துவிட்டார் ஜோதிமணி. கரூர் நாடாளுமன்ற தொகுதியில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை, வேடசந்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. திருச்சி, திண்டுக்கல், கரூர் என மூன்று மாவட்டங்கள் இதில் வரும் நிலையில், விராலிமலை தொகுதியை தவிர மற்ற 5 சட்டமன்ற தொகுதிகளும் திமுக வசம் உள்ளன.

அமைச்சர் செந்தில்பாலாஜி
இதனிடையே கரூர் மக்களவைத் தொகுதியில் இந்த முறை திமுகவே களமிறங்க வேண்டும் என்பது கரூர் மாவட்ட திமுகவினரின் கோரிக்கையாக உள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜியின் எண்ணவோட்டமும் அப்படியே உள்ளதால் கரூர் தொகுதி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சிபிஐ விசாரணை முடிந்து உற்சாகமாக சிரித்த முகத்தோடு வந்த விஜய்.. உடனே சென்னைக்கு ரிட்டர்ன்! -
Vijay CBI: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு! டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! என்னென்ன கேள்விகள்? -
வெளியானது IANS கருத்துக்கணிப்பு ரிசல்ட்: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications