கரூரில் 8-வது நாளாக ஐடி ரெய்டு..வழக்கறிஞர் வீட்டில் 2 பெட்டிகளில் ஆவணங்கள்..அள்ளி சென்ற அதிகாரிகள்
கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் 8-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நேற்றை விட கூடுதல் இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகிறார்கள்
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், கல் குவாரிகள் உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மே 26ஆம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனை நடைபெற்ற முதல் நாளில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பல இடங்களில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் தொடர்ந்து கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனையின் போது ஒருசில இடங்களுக்கு வருமான வரித்துறையினர் சீல் வைத்துள்ளனர்.
நேற்று கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள ஒரு வீடு, மாயனூரில் உள்ள பண்ணை தோட்டம், கரூர் ராயனூரில் உள்ள ஒரு வீடு, கரூரில் ஒரு அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை கொண்டனர். இந்த நிலையில் 8-வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று கரூரில் 22 இடங்களில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில், இன்று கூடுதலான இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கரூர் லாரி மேட்டில் உள்ள வழக்கறிஞர் செங்கோட்டையன் வீட்டில் நேற்று மதியம் முதல் சோதனை நடந்தது. இன்றும் சோதனை தொடரும் நிலையில், இரண்டு பெட்டிகளில் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர். இரண்டு அட்டை பெட்டிகளை தூக்க முடியாமல் துக்கிக் கொண்டு அவர்களது காரில் எடுத்து கொண்டு சென்றனர்.
அதேபோல், கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் மணியின் கொங்கு மெஸ் உணவு விடுதிக்கு ஐடி அதிகாரிகள் சீல் வைத்து இருந்த நிலையில், வருமான வரித்துறையினரால் வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. பிறகு மீண்டும் அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர். வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications