கரூரில் 8 நாட்களாக நடைபெற்ற ஐ.டி ரெய்டு நிறைவு.. சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்!
கரூர் : கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலங்களில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.
கரூரில் மின்சாரம் - மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் மற்றும் டாஸ்மாக், மின்துறை ஒப்பந்ததாரர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 26-ஆம் தேதி காலை முதல் தொடர் சோதனை நடத்தி வந்தனர்.
கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் வீட்டில் சோதனை நடைபெற்ற போது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்புடன் 27ஆம் தேதி முதல் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
கரூர், சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட 25 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி எதிரே உள்ள சுரேந்தர் மெஸ், அதன் மாடியில் உள்ள நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது. சோதனையின் போது ஒருசில இடங்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கரூர் துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது. அமைச்சர் செந்தி பாலாஜியின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் வீடு, அலுவலகம், பண்ணை வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

எட்டாவது நாளான இன்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள், நண்பர்கள் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதனிடையே, கரூர் லாரி மேட்டில் உள்ள வழக்கறிஞர் செங்கோட்டையன் வீட்டில் நேற்று மதியம் முதல் சோதனை நடந்தது. இன்றும் சோதனை தொடர்ந்த நிலையில், இரண்டு பெட்டிகளில் ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் மணியின் கொங்கு மெஸ் உணவு விடுதிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்து இருந்த நிலையில், அந்த சீல் அகற்றப்பட்டு இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. பிறகு மீண்டும் அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர்.
இந்நிலையில், கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் அதொடர்புடையோரின் இடங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. சோதனை நிறைவடைந்துள்ள நிலையில், காவல்துறை பாதுகாப்பை திரும்ப பெற்றுக் கொள்ள வருமானவரித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீல் வைக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கரூரில் சுமார் 20 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்!












Click it and Unblock the Notifications