ஜோதிமணியை இப்படியா நிற்க வைப்பது.. உட்கார வைத்திருக்கலாமே.. கரூர் காங்கிரஸில் புலம்பல்!

Subscribe to Oneindia Tamil

கரூர்: அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவருடன் பல இடங்களில் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் கலந்துகொண்டார். ஆனால் அவருக்கு திமுகவினர் உரிய மரியாதை தரவில்லை என கரூர் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Karur congress expresses unhappy over the treatment of jothimani

கரூர் சின்னச்சாமி, பொன்முடி, நன்னியூர் ராஜேந்திரன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் ஸ்டாலினோடு அமர்ந்திருந்தார்கள். பாவம் ஜோதிமணி கைகளை கட்டியபடி ஓரமாக நின்றுக்கொண்டிருந்தார். ஆனால் ஒரு பேச்சுக்கு கூட ஜோதிமணியை அவர்கள் உட்கார சொல்லவில்லையாம்.

இதனால் அண்ணே நீங்க தளபதியை அனுப்பி வைத்த பின்னர் நான் பிரச்சாரத்திற்கு வருகிறேன். இப்போது எதற்கு சிரமம் என செந்தில்பாலாஜியிடம் ஜோதிமணி கூறினாராம்.

கூட்டணி கட்சி எம்.பி.வேட்பாளர் அல்லது நிர்வாகி என்ற முறையில் ஜோதிமணியை ஸ்டாலின் பங்கேற்ற திண்ணை பிரச்சார கூட்டங்களில் அமர வைத்திருக்க வேண்டும். லோக்கல் நிர்வாகிகளின் கவனக்குறைவே இதற்கு காரணம், மற்றப்படி எந்த உள்நோக்கமும் இல்லை என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+