Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நட்பை மறக்கடித்த காமம்.. துடிக்க துடிக்க பறிபோன உயிர்.. நண்பர்களே போட்ட "ஸ்கெட்ச்" - அலறும் கரூர்

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் நடைபெற்றுள்ள சம்பவம் அந்த மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. காமம் தலைக்கு ஏறியதால் உயிருக்கு உயிராக பழகிய நண்பனை துடிக்க துடிக்க கொலை செய்துள்ளனர் சில கொடூரர்கள்.

நண்பனின் மனைவியை அடைய வேண்டும் என்ற மோகம்தான் அந்த இளைஞர்களை இந்த விபரீத காரியத்தை செய்ய வைத்திருக்கிறது.

நண்பர்கள் என்ற பெயரில் பழகும் அனைவரையுமே அப்பாவித்தனமாக நம்பி விடக்கூடாது என்பதற்கு, இந்த சம்பவமே சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.

திருமணம் முடித்த நண்பன்

திருமணம் முடித்த நண்பன்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (33). இவருக்கு அந்தப் பகுதியில் நண்பர்கள் அதிகம் எனக் கூறப்படுகிறது. தினமும் அவரது நண்பர்கள் ராஜீவ்கா்நதியின் வீட்டுக்கு வருவதும், சாப்பிட்டுவிட்டு செல்வதும் வழக்கமாக இருந்துள்ளது. இந்த சூழலில்தான், சில மாதங்களுக்கு முன்பு ராஜீவ்காந்திக்கு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த போதிலும், தனது நண்பர்களை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் ராஜீவ்காந்தி.

நண்பனின் மனைவி மீது மோகம்

நண்பனின் மனைவி மீது மோகம்

அந்த வகையில், ராஜீவ்காந்தியின் நண்பரான ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த நவாஸ் (30) என்பவரும் அவரது வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது, ராஜீவ்காந்தியின் மனைவியின் மீது நவாஸுக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. எனவே, ராஜீவ்காந்தி இல்லாத சமயங்களில் அவரது வீட்டுக்கு நவாஸ் சென்றிருக்கிறார். ராஜீவ்காந்தியின் மனைவியும் நவாஸுடன் சகஜமாக பேசியுள்ளார். ஒருகட்டத்தில், நவாஸின் தவறான நோக்கத்தை புரிந்துகொண்ட ராஜீவ்காந்தியின் மனைவி அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

கண்டித்த நண்பன்

கண்டித்த நண்பன்

எனினும், நவாஸ் அடிக்கடி ராஜீவ்காந்தியின் மனைவியை தனது ஆசைக்கு இணங்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதையடுத்து, நவாஸின் செயல்கள் குறித்து தனது கணவர் ராஜீவ்காந்தியிடம் கூறி அவர் அழுதிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜீவ்காந்தி, நவாஸை அழைத்து கண்டித்ததாக தெரிகிறது. மேலும், "இனி என் வீட்டிற்கு நீ வர வேண்டாம்" எனவும் கூறியுள்ளார்.

தீர்த்துக்கட்டிய கொடூரம்

தீர்த்துக்கட்டிய கொடூரம்

இதனால் ராஜீவ்காந்தி மீது கடும் கோபமடைந்த நவாஸ், அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். இதற்காக தனது நண்பன் கருப்பசாமியையும் துணைக்கு சேர்த்துள்ளார். அதன்படி, கடந்த 10-ம் தேதி இரவு, வேலை முடிந்து வந்துக் கொண்டிருந்த ராஜீவ்காந்தியை வழிமறித்த நவாஸும், கருப்பசாமியும் உருட்டுக்கட்டையாலும், கற்களாலும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜீவ்காந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், தலைமறைவான நவாஸையும், கருப்பசாமியையும் கைது செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+