கரூரில் பயங்கர தீ விபத்து.. 20க்கும் அதிகமான பேருந்துகள் எரிந்து கருகின!
கரூர்: கரூரில் பேருந்துகளுக்கு கூடு கட்டும் இடத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்தில் 20க்கும் அதிகமான பேருந்துகள் எரிந்து கருகியிருக்கின்றன.
பேருந்து மற்றும் லாரிகளுக்கு பாடி கட்டும் இடம் என்றால் அது கரூர்தான். சென்னை அசோக் லேலாண்டில் பேருந்துகளை, லாரிகளை என்ஜினுடன் கூடிய அடி பகுதியை வாங்கி சென்று, கரூரில் வைத்துதான் முழு கூடும் கட்டப்படும்.

தமிழ்நாடு மட்டுமல்லாது சில நேரங்களில் வெளி மாநிலங்களிலிருந்து கூட இங்கு பாடி கட்ட வாகனங்கள் வருவதுண்டு. கரூர் முழுவதும் பல இடங்களில் பாடி கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூரின் சின்னமநாயகன்பட்டியில் பாடி கட்டும் இடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. மதியம் 3 மணி வாக்கில் ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 23 பேருந்துகள் எரிந்து கருகியிருக்கின்றன. ஒரு பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து அடுத்தடுத்த பேருந்துகளுக்கு எளிதாக பரவியிருக்கிறது.
இங்கு மொத்தம் 50 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தீ பரவியதையடுத்து தொழிலாளர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, தீயணைப்பு துறையினர் தீவிரமாக போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விபத்து குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், "முருகன் என்பவர் பழைய பேருந்துகளை வாங்கி அதில் உள்ள பாகங்களை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்த வந்திருக்கிறார். எனவே அவருக்கு சொந்தமான இடத்தில் 50க்கும் மேற்பட்ட பழைய பேருந்துகள் இருந்தன. மதியம் 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எனவே நாங்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தோம். 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்" என்று கூறியிருக்கின்றனர்.
சாதாரணமாக ஒரு பேருந்தின் அடிபாகத்தின்(Chassis) விலை மட்டும் தோராயமாக ரூ.20 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இதற்கு பாடி கட்ட ரூ.20 லட்சம் வரை செலவாகும். ஆக ஒரு முழு பேருந்து ரூ.40 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தால் உரிமையாளர்களுக்கு பல லட்சம் வரை செலவை இழுத்துவிட்டு இருக்கும். ஆனால் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது பழைய பேருந்துகள் என்பதால் நஷ்டம் குறைவாகவே ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
கோடை காலங்களில்தான் தீ விபத்துகள் அதிகம் நடக்கும். இது தென்மேற்கு பருவமழை காலம். இந்த சமயத்தில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது? என்பது கேள்வியாக இருக்கிறது. அதேபோல, பழைய பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படும் இடங்களில் தீயணைப்பு கருவிகள் இருந்திருந்தால் இந்த அளவுக்கு விபத்து ஏற்பட்டிருக்காது என்று சொல்லப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications