கரூரில் பயங்கர தீ விபத்து.. 20க்கும் அதிகமான பேருந்துகள் எரிந்து கருகின!
கரூர்: கரூரில் பேருந்துகளுக்கு கூடு கட்டும் இடத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்தில் 20க்கும் அதிகமான பேருந்துகள் எரிந்து கருகியிருக்கின்றன.
பேருந்து மற்றும் லாரிகளுக்கு பாடி கட்டும் இடம் என்றால் அது கரூர்தான். சென்னை அசோக் லேலாண்டில் பேருந்துகளை, லாரிகளை என்ஜினுடன் கூடிய அடி பகுதியை வாங்கி சென்று, கரூரில் வைத்துதான் முழு கூடும் கட்டப்படும்.

தமிழ்நாடு மட்டுமல்லாது சில நேரங்களில் வெளி மாநிலங்களிலிருந்து கூட இங்கு பாடி கட்ட வாகனங்கள் வருவதுண்டு. கரூர் முழுவதும் பல இடங்களில் பாடி கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூரின் சின்னமநாயகன்பட்டியில் பாடி கட்டும் இடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. மதியம் 3 மணி வாக்கில் ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 23 பேருந்துகள் எரிந்து கருகியிருக்கின்றன. ஒரு பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து அடுத்தடுத்த பேருந்துகளுக்கு எளிதாக பரவியிருக்கிறது.
இங்கு மொத்தம் 50 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தீ பரவியதையடுத்து தொழிலாளர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, தீயணைப்பு துறையினர் தீவிரமாக போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விபத்து குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், "முருகன் என்பவர் பழைய பேருந்துகளை வாங்கி அதில் உள்ள பாகங்களை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்த வந்திருக்கிறார். எனவே அவருக்கு சொந்தமான இடத்தில் 50க்கும் மேற்பட்ட பழைய பேருந்துகள் இருந்தன. மதியம் 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எனவே நாங்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தோம். 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்" என்று கூறியிருக்கின்றனர்.
சாதாரணமாக ஒரு பேருந்தின் அடிபாகத்தின்(Chassis) விலை மட்டும் தோராயமாக ரூ.20 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இதற்கு பாடி கட்ட ரூ.20 லட்சம் வரை செலவாகும். ஆக ஒரு முழு பேருந்து ரூ.40 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தால் உரிமையாளர்களுக்கு பல லட்சம் வரை செலவை இழுத்துவிட்டு இருக்கும். ஆனால் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது பழைய பேருந்துகள் என்பதால் நஷ்டம் குறைவாகவே ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
கோடை காலங்களில்தான் தீ விபத்துகள் அதிகம் நடக்கும். இது தென்மேற்கு பருவமழை காலம். இந்த சமயத்தில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது? என்பது கேள்வியாக இருக்கிறது. அதேபோல, பழைய பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படும் இடங்களில் தீயணைப்பு கருவிகள் இருந்திருந்தால் இந்த அளவுக்கு விபத்து ஏற்பட்டிருக்காது என்று சொல்லப்படுகிறது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications