செந்தில் பாலாஜி எங்கே.. 3 சென்ட் நிலம் எங்கே.. திமுக எம்எல்ஏக்களை முற்றுகையிட்ட மக்கள்.. பரபரப்பு!
செந்தில் பாலாஜிக்கு எதிராக மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்
Recommended Video
கரூர்: "செந்தில் பாலாஜி எங்கே.. 3 சென்ட் நிலம் தருவதாக சொன்ன செந்தில் பாலாஜி எங்கே" என்ற பதாகைகளை வைத்து தொகுதி மக்கள் திமுக எம்எல்ஏக்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுகவில் இருந்து அமமுகவுக்கு வந்து.. பிறகு திமுகவுக்கு தாவியவர் செந்தில் பாலாஜி. வந்த கொஞ்ச நாளிலேயே எல்லார் காதிலும் புகை வரும் அளவுக்கு மாவட்ட செயலாளர் பதவி தரப்பட்டது.
இந்த புகைச்சல் அடங்குவதற்குள் அரவக்குறிச்சி இடைத்தேர்தலிலும் நிறுத்தப்பட்டு எம்எல்ஏவாகவும் வெற்றி பெற்றார். இப்போது திமுகவின் மிக முக்கிய நிர்வாகியாக உள்ளார்.

சலசலப்புகள்
செந்தில் பாலாஜி, பிரச்சாரத்தின்போது, தான் வெற்றி பெற்றவுடன் 25 ஆயிரம் நபர்களுக்கு 3 சென்ட் இலவச நிலம், அதில் 10 ஆயிரம் பேருக்கு நிச்சயம் கொடுப்பதாக பொதுமக்களிடையே அறிவித்தார். இப்படி எல்லாருக்கும் 3 சென்ட் நிலங்கள் தருவது சாத்தியமா என்றும் அப்போது கேள்விகள், சலசலப்புகள் எழுந்தன.

முணுமுணுப்புகள்
ஒருவேளை 22 தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி பிடிக்கும் என்ற நம்பிக்கையோடும் இந்த அறிவிப்பினை செய்துவிட்டாரோ என்றும்கூட அங்கலாய்ப்புகள் எழுந்தன.

அதிருப்தி
இப்போது, அந்த இலவச நிலம் பற்றி செந்தில்பாலாஜி எதுவுமே பேசாமல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கட்சிக்காரர்களின் வீட்டு விசேஷங்களுக்கு மட்டும் செல்கிறார், ஆனால் வெற்றி பெற்றதற்கு நன்றி சொல்ல கூட தொகுதி பக்கம் செந்தில் பாலாஜி வரவில்லை என்று வருத்தத்தில் உள்ளனராம்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இந்நிலையில், இன்று செந்தில்பாலாஜி, நெடுங்கூர் பகுதி ஏரியில் தூர்வாரும் பணிக்காக சென்றிருந்தார். அவருடன் கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளரும், திருவரம்பூர் சட்டமன்ற திமுக எம்எல்ஏவான அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உடன் சென்றிருந்தார். அப்போது இந்த இரு எம்எல்ஏக்களுக்கு வழிநெடுகிலும் எதிர்ப்பு தெரிவித்து பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

முற்றுகை
"3 சென்ட் நிலம் தருவதாக சொன்ன செந்தில் பாலாஜி", "எங்கே 3 சென்ட் நிலம்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் உதவியுடன் திமுக எம்எல்ஏக்கள் பாதுகாப்புடன் வெளியேறினர்.
-
விஜயபாஸ்கரை பார்த்து பயம்.. செந்தில் பாலாஜிக்கு தில் இருக்கா.. கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தடாலடி -
செந்தில் பாலாஜி கோவையில் போட்டியா.. ஆடிப்போன எஸ்.பி வேலுமணி.. செய்தியாளர் கேள்விக்கு மழுப்பல் பதில் -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி -
வேடசந்தூர் சிட்டிங் எம்எல்ஏ காந்திராஜனுக்கு சீட் மறுப்பு! திமுகவின் சாமிநாதன் வேட்பாளரானது எப்படி? -
இனிமே கரூர் நாங்கதான்.. அடித்து சொல்லும் அதிமுக! கோவைக்கு ஜாகையை மாற்றிய செ.பா.. செம குஷியில் வி.பா! -
கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. தங்கமணிக்கு எதிராக தாறுமாறாக வியூகம் அமைக்கும் செந்தில்பாலாஜி -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்!












Click it and Unblock the Notifications