மின்சாரத் துறையில் விஞ்ஞான ஊழல்.. கருணாநிதியை மிஞ்சும் செந்தில் பாலாஜி.. அண்ணாமலை குற்றச்சாட்டு!

Subscribe to Oneindia Tamil

கரூர்: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாதம் ஒரு பொய் சொல்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கரூரில் மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், அண்மையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களின் அடிமடியில் கை வைக்கும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். தேர்தலின் போது, மாதம் மாதம் மின் கணக்கீடு முறை கொண்டு வரப்படும் என்று திமுக அறிவித்தது. ஆனால் இதுநாள் வரை மாதம் ஒருமுறை மின் கணக்கீடு முறை அமலுக்கு வரவில்லை.

அன்றும், இன்றும்

அன்றும், இன்றும்

மத்திய அரசின் மற்ற அறிவுறுத்தல்களை எல்லாம் நிறைவேற்றாமல், லாப நோக்கோடு மின் கட்டணத்தை மட்டும் உயர்த்தி இருக்கிறார்கள். 2016ல் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜி மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் அதே மு.க.ஸ்டாலின், இன்று செந்தில் பாலாஜியை பாராட்டுகிறார்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

கரூர் மாவட்ட மக்களை ஏழையாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான் செந்தில் பாலாஜியின் எண்ணம். அப்போதுதான் தேர்தலுக்கு தேர்தல் அவர்களுக்கு 1000, 2000 ரூபாய் பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முடியும். அதன் பிறகு மீண்டும் அவர்கள் ஏழையாக வைத்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறார். டாஸ்மாக் கடை வைத்து தமிழக பெண்களின் தாலி அறுத்து வருகின்றனர். ஊழல் அரசியல்வாதிகளை அப்புறப்படுத்துவதே இலக்கு. ஏழை மக்களுக்காக பாஜக எப்போதும் உடன் நிற்கும்.

Recommended Video

    Kallakurichi கலவரம் பற்றி சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை
    மத்திய அரசு

    மத்திய அரசு

    அதிகமாக பொய் சொல்லும் அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டு வருகிறார். மின் கட்டணத்தை உயர்த்தக் கோரி மத்திய அரசு எழுதிய கடிதத்தை செந்தில் பாலாஜி வெளியிட வேண்டும். தமிழக மின்சார வாரியத்தின் கடனை குறைக்கவே மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கும். கருணாநிதியையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு செந்தில் பாலாஜி விஞ்ஞான ஊழலில் ஈடுபடுகிறார்.

     நோட்டீஸ் பற்றி பேச்சு

    நோட்டீஸ் பற்றி பேச்சு

    இதுவரை அமைச்சர் செந்தில் பாலாஜி 5 முறை நோட்டீஸ் வழங்கியுள்ளார். இதுவரை 5 கட்சிகள் மாறியுள்ளார். இப்போது 6வது கட்சி மாறுவதற்கு செந்தில் பாலாஜி தயாராக உள்ளார். விரைவில் அவர் சிறையில் செல்ல தயாராகி கொள்ளலாம். இதுபோன்ற அரசியல்வாதிகலை அப்புறப்படுத்துவதே பாஜகவின் இலக்கு. ஏழைகள் இருக்கும் வரை பாஜகவுக்கு வேலை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+