"சூடா ஒரு டீ கொடுப்பா".. அப்படியே முதல்வர் ஸ்டாலின் பாணியில் கரூரில் கலக்கிய உதயநிதி!
கரூர்: சூடா ஒரு டீ கொடுப்பா என தந்தை ஸ்டாலின் பாணியில் அவரது மகன் உதயநிதியும் கரூரில் களமிறங்கி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அங்கு மக்களோடு சகஜமாக உட்கார்ந்து பேசியதை கண்டு அங்கிருந்தவர்கள் பூரிப்படைந்தனர்.
Recommended Video
முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போதும் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஸ்டாலின், தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நடைப்பயிற்சி மேற்கொண்டதாக மா சுப்பிரமணியன் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
தற்போது ஸ்டாலின் முதல்வராகிவிட்ட நிலையில் பணிச்சுமை காரணமாக வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வருகிறார். இது குறித்த வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகும். இது மட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலின் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலைகளில் சைக்கிள் பயணத்தையும் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

செல்பி
அவ்வாறு சைக்கிள் பயணத்தின் போது பொதுமக்களிடம் குறை கேட்பதும் அவர்களுடன் உரையாடுவதும் வழக்கம் . இவருடன் ஏராளமானோர் செல்பி எடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். பின்னர் ரிலாக்ஸ் செய்ய ஆங்காங்கே உள்ள டீக்கடைகளில் டீ குடித்துக் கொண்டும் பொதுமக்களுடன் உரையாடுவார். பள்ளி குழந்தைகளிடம் ஆன்லைன் வகுப்புகள் குறித்து கேட்டறிவார்.

உதயநிதி ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலினை போல் அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் தேர்தல் பிரச்சாரத்தில் டீக்கடைகளுக்குச் சென்று அங்கு பொதுமக்களுடன் தேனீர் அருந்துகிறார். மக்களுடன் சகஜமாக பழகுகிறார். கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

வேலாயுதம்பாளையம்
அப்போது கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் பகுதியில், புகளூர் நகராட்சிக்குட்பட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பேக்கரி கடையில் ஒன்றில் அவரே சென்று அந்த கடை ஒன்றில் தேநீர் அருந்தினார். அப்போது அருகில் உள்ள மூதாட்டி மற்றும் அங்கிருந்தவர்களை உதயநிதி நலம் விசாரித்தார்.

சூடா ஒரு டீ கொடுப்பா
எப்போதுமே, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆங்காங்கே பிரச்சாரமோ, அல்லது ஏதேனும் நிகழ்ச்சிக்கோ செல்லும் போது, ஆங்காங்கே டீ கடைக்கு சென்று "சூடா ஒரு டீ கொடுப்பா" என்று தான் கூறி வாங்கி அருந்துவார். அவரது பாணியில் அப்படியே மகன் உதயநிதி ஸ்டாலின் களமிறங்கியுள்ளது இப்பகுதி மக்களிடையே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications