திடீரென பூமியே நடுங்க.. கிருஷ்ணகிரி மக்களை அலற வைத்த நில அதிர்வு.. ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இன்று திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1.32 மணியளவில் பூமிக்கு கீழே 5 கி.மீ ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளது.
உலகளவில் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தும் இயற்கைப் பேரிடர்களில், அபாயகரமானது நிலநடுக்கம். இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் தற்போது இல்லை. அதேசமயம் நமது அண்டை நாடுகளான நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அவ்வப்போது ஏற்படும் நிலநடுக்கம் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவில் டெல்லி, மும்பை, ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வந்தது. சென்னை மற்றும் வங்கக்கடல் பகுதியிலும் லேசான நில அதிர்வுகள் அவ்வப்போது உணரப்பட்டு உள்ளன. இந்நிலையில், கிருஷ்ணகிரி மக்களை இன்று அதிர வைத்துள்ளது நிலநடுக்கம்.
கிருஷ்ணகிரியில் இன்று பிற்பகலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை பகுதியில் மக்கள் பூமி அதிர்ந்ததை உணர்ந்து அச்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரியில் இன்று பிற்பகல் 1.32 மணியளவில் பூமியின் அடியில் 5 கி.மீ ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட மக்களால் உணரப்பட்டது. கிருஷ்ணகிரியில் ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications