Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிருஷ்ணகிரி அருகே மாந்தோப்பில் கொன்று புதைக்கப்பட்ட சென்னை ஆடிட்டர்.. பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: சென்னையை சேர்ந்த ஆடிட்டர் கொலை செய்து புதைக்கப்பட்டதாக கூறப்படும், கிருஷ்ணகிரி அடுத்த சாம்பல்பட்டி அருகே கிருஷ்ணகிரி போலீஸ் எஸ்.பி. நேரில் ஆய்வு செய்துள்ளார்.

Recommended Video

    கிருஷ்ணகிரி அருகே மாந்தோப்பில் கொன்று புதைக்கப்பட்ட சென்னை ஆடிட்டர்.. பின்னணி என்ன?

    கடந்த 26ம் தேதி சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜன ரஞ்சன் பிரதான் என்பவர் தொழில் நிமித்தமாக வாடிக்கையாளர் ஒருவரை பார்க்க வேலூர் சென்று வருவதாக மனைவி பூர்ணிமா என்பவரிடம் கூறிச் சென்றுள்ளார்.

    ஆனால், அன்று இரவு அவரது மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, தான் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி பகுதியில் உள்ள கிரானைட் குவாரில் இன்ஸ்பெக்சன் செய்ய வந்து உள்ளதாகவும் தன்னுடன் தனது நண்பர் கிருஷ்ணகுமார், சபரீசன் மற்றும் சிலர் உள்ளதாக கூறியுள்ளார்.

     காரில் சென்ற ஆடிட்டர்

    காரில் சென்ற ஆடிட்டர்

    மீண்டும் 27ம் தேதி காலை 10 மணி அளவில் தனது கணவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள, பூர்ணிமா முயற்சித்தபோது, தொடர்புகொள்ள முடியவில்லை எனவும், தனது கணவரின் நண்பரான அட்வகேட் பாலாஜி என்பவரிடமிருந்து ஸ்விப்ட் காரை கணவர் இரவல் பெற்றுச் சென்றதாகவும் போலீசில் பூர்ணிமா புகார் அளித்தார்.

    ஜிபிஎஸ் ஆய்வு

    ஜிபிஎஸ் ஆய்வு

    இந்த நிலையில் காரில் உள்ள ஜிபிஎஸ் கருவி கொண்டு அமைவிடத்தை பார்த்தபோது கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் மற்றும் பாரதி நகரில் கடைசியாக கார் நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

    போலீசில் புகார்

    போலீசில் புகார்

    இது சம்பந்தமாக இரண்டு நாட்கள் தேடிப் பார்த்ததில் எங்கும் கணவர் கிடைக்கவில்லை எனக் கூறி, கிருஷ்ணகுமார் மற்றும் சபரிஷ் ஆகிய இருவர் மீதும் சந்தேகம் உள்ளது என்று பூர்ணிமா தெரிவித்தார். தனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் உள்ளதாகவும் தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு கூறியும் கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் பூர்ணிமா புகார் அளித்துள்ளார்.

    ஆடிட்டர் உடல்

    ஆடிட்டர் உடல்

    இதனைத்தொடர்ந்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி காவல் நிலைய எல்லை பகுதியான கோல்லபட்டி கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் ஜன ரஞ்சன் பிரதான், புதைக்கப்பட்ட நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்து விசாரணை நடத்தியுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய திருமால் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் அளித்த தகவலின்பேரில், சபரிசன், சிவன், கோபி, கிருஷ்ணகுமர், மணிவண்ணன். உள்ளிட்ட 5 பேர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான பின்னணி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+