ஓசூர் அருகே ஊருக்குள் நுழைந்த சிறுத்தை... அச்சத்தில் உறைந்த பொது மக்கள்!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, கிராமத்திற்குள் சிறுத்தை நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஓசூர் வனக்கோட்டத்தில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஜவளகிரி, உரிகம், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் உள்ள காப்புக்காடுகளில் யானை, கரடி, புள்ளிமான், சிறுத்தை, காட்டெருமை, உள்ளிட்ட பல அரியவகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு தேடி, வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது வெளியேறும் யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள், அருகேயுள்ள கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நுழைவதும் வாடிக்கையாக உள்ளது.

வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை, புலி மற்றும் சிறுத்தை போன்ற விலங்குகள், அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து, விவசாயிகள் வளர்த்து வரும் ஆடு, மாடு, நாய் போன்றவற்றை அடித்து கொன்று வருகிறது. பின்னர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வனத்துறையினர் கடுமையாக போராடி, வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதும், சிறுத்தையை போன்ற விலங்குகளை கூண்டு வைத்து பிடித்துச் சென்று விடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து கடந்த 29-ம் தேதி வெளியேறிய சிறுத்தை ஒன்று, ஓசூர் அருகேயுள்ள பைரப்பனஹள்ளி என்ற கிராமத்திற்குள் நுழைந்தது. பின்னர் பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றித் திரிந்த அந்த சிறுத்தை, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளிப்புறச் சுவற்றில் மீது ஏறி நின்றது. பின்னர், அங்கிருந்து திரும்பிச் சென்றது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
இந்த காட்சிகளை கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள், சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வனத்துறையினர் அக்கிராமத்திற்குச் சென்று சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வனத்துறையினர் சிறுத்தையை எப்போது பிடிப்பார்களோ என ஏங்கி காத்திருக்கும் அக்கிராம மக்கள், சிறுத்தையை பிடித்தால்தான் நிம்மதியடைவார்கள்.
இதுபோன்று, வனவிலங்குகள் ஊருக்குக்குள் புகுந்து பொதுமக்களை அச்சறுத்தும் சம்பவங்களுக்கு, தமிழக அரசு நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என்பதே மலைவாழ் கிராம மக்கள் மட்டுமின்றி அனைவரது விருப்பமுமாகும்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications