ஓசூர் அருகே ஊருக்குள் நுழைந்த சிறுத்தை... அச்சத்தில் உறைந்த பொது மக்கள்!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, கிராமத்திற்குள் சிறுத்தை நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஓசூர் வனக்கோட்டத்தில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஜவளகிரி, உரிகம், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் உள்ள காப்புக்காடுகளில் யானை, கரடி, புள்ளிமான், சிறுத்தை, காட்டெருமை, உள்ளிட்ட பல அரியவகை வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு தேடி, வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது வெளியேறும் யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள், அருகேயுள்ள கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நுழைவதும் வாடிக்கையாக உள்ளது.

வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானை, புலி மற்றும் சிறுத்தை போன்ற விலங்குகள், அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து, விவசாயிகள் வளர்த்து வரும் ஆடு, மாடு, நாய் போன்றவற்றை அடித்து கொன்று வருகிறது. பின்னர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வனத்துறையினர் கடுமையாக போராடி, வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதும், சிறுத்தையை போன்ற விலங்குகளை கூண்டு வைத்து பிடித்துச் சென்று விடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
அந்த வகையில், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து கடந்த 29-ம் தேதி வெளியேறிய சிறுத்தை ஒன்று, ஓசூர் அருகேயுள்ள பைரப்பனஹள்ளி என்ற கிராமத்திற்குள் நுழைந்தது. பின்னர் பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றித் திரிந்த அந்த சிறுத்தை, அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளிப்புறச் சுவற்றில் மீது ஏறி நின்றது. பின்னர், அங்கிருந்து திரும்பிச் சென்றது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
இந்த காட்சிகளை கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள், சிறுத்தையை உடனடியாக பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வனத்துறையினர் அக்கிராமத்திற்குச் சென்று சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வனத்துறையினர் சிறுத்தையை எப்போது பிடிப்பார்களோ என ஏங்கி காத்திருக்கும் அக்கிராம மக்கள், சிறுத்தையை பிடித்தால்தான் நிம்மதியடைவார்கள்.
இதுபோன்று, வனவிலங்குகள் ஊருக்குக்குள் புகுந்து பொதுமக்களை அச்சறுத்தும் சம்பவங்களுக்கு, தமிழக அரசு நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என்பதே மலைவாழ் கிராம மக்கள் மட்டுமின்றி அனைவரது விருப்பமுமாகும்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications