பெங்களூருவில் இருந்து புறப்பட்ட காரைக்கால் பயணிகள் ரயில் கிருஷ்ணகிரி அருகே தடம் புரண்டது
கிருஷ்ணகிரி: பெங்களூரு-காரைக்கால் பயணிகள் ரயில் கிருஷ்ணகிரி அருகே இன்று காலை திடீரென தடம் புரண்டது. இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தினசரி பெங்களூருவில் இருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயிலை த்தான் பெங்களூருவில் இருந்து ஓசூர் செல்லும் ஏராளமான மக்கள் நம்பி இருக்கிறார்கள். இந்த ரயில் காலை 7.17க்கு கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காரைக்காலுக்கு இரவு 10.40க்கு சென்றடையும்.
இந்நிலையில் இன்று வழக்கம் போல் புறப்பட்ட ரயில் காலை 9.45 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் காடுசெட்டிபட்டி அருகே சென்ற போது திடீரென தடம் புரண்டது.

ரயில்வே ஊழியர்கள்
இந்த விபத்தில் பயணிகளுக்கோ ரயிலுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.தண்டவாளத்தைவிட்டு தரையில் இறங்கிய ரயிலின் என்ஜின் சக்கரங்களை பழையபடி தண்டவாளத்தில் ஏற்றி சீரமைக்கும் பணியினை ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டனர்.

ரயில்சேவை பாதிப்பு
ரயில் தடம் புரண்ட காரணத்தால், சேலம் மற்றும் பெங்களூரு இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் செல்லும் பயணிகளுக்கு ஓசூரில் இருந்து செல்லும் வகையில் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக பெங்களூரு டிவிஷனல் ரயில்வே மேலாளர் அசோக் குமார் வர்மா தெரிவித்தார்.

என்ஜின் மட்டுமே
ரயில் என்ஜினின் முன்பகுதி சக்கரம் மட்டும் தரையிறங்கியது என்றும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அசோக் குமார் கூறினார்.

லோக்மான்யாதிலாக்
கோவையில் இருந்து பெங்களூரு வழியாக மும்பை செல்லும் லோக்மான்யாதிலாக் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 11014) சேலம், திருப்பத்தூர், பங்காருபேட், கேஎஸ்ஆர் பெங்களூரு சிட்டிரயில் நிலையம் வழியாக திருப்பிவிடப்பட்டது. இந்த ரயில் விபத்து தொடர்பாக உயர் ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications