முயல் பண்ணை மூலம் மாதம் ரூ.1 லட்சத்திற்கு குறையாத வருமானம்... சாதிக்கும் கிருஷ்ணகிரி இளைஞர்
கிருஷ்ணகிரி: முயல் பண்ணை மூலம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டி வருகிறார் கிருஷ்ணகிரி இளைஞர் ஒருவர்.
தந்தை மேஸ்திரியாக உள்ள நிலையில், வங்கியில் கடன் பெற்று முயல் பண்ணை தொடங்கிய இவர் இன்று பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.
படித்த படிப்பிற்கேற்ற பணி கிடைக்கவில்லை என வீட்டில் முடங்கிக்கிடக்காமல் பிடித்த பணியை செய்யத் தொடங்கினார் இவர்.

பி.எஸ்.சி. பட்டதாரி
கிருஷ்ணகிரியை சேர்ந்த வெங்கடேஷ் என்ற இளைஞர் தனது வீட்டை ஒட்டி உள்ள இரண்டரை செண்ட் நிலத்தில் முயல் பண்ணை அமைத்து மாதம் தோறும் லட்சங்களில் வருவாய் ஈட்டி வருகிறார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் படித்த இவர், பாதுகாப்புத் துறையில் பணியில் சேர்வதற்காக கடும் முயற்சிகள் மேற்கொண்டும் பலன் அளிக்காததால் முயல் பண்ணை அமைத்து தனக்கென ஒரு சொந்த தொழிலை உருவாக்கிக் கொண்டார்.

இரண்டரை லட்சம்
வெங்கடேஷின் தந்தை கட்டிட வேலை பார்க்கும் மேஸ்திரியாக உள்ளார். பெரியளவில் பின்புலம் இல்லை என்றாலும் மன தைரியமும், சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியமும் அவரை வங்கிகளில் கடன் கேட்க வைத்தது. பல வங்கிகளில் கடன் கோரிய வெங்கடேஷுக்கு, சிண்டிகேட் வங்கி இரண்டரை லட்சம் ரூபாய் வரை எந்த வித பிணையும் இல்லாமல் கடனாக அளித்து முயல் பண்ணை அமைக்க ஊக்குவித்தது. வங்கி அளித்த பணத்தை கொண்டு முயல் பண்ணைக்கான கூண்டு, ஷெட், உள்ளிட்டவைகள் அமைத்துக் கொண்டதோடு, அந்த தொகையை முதலீடாக கொண்டு பல்வேறு ரக முயல்களை வாங்கியுள்ளார்.

கறிக்கு விற்பனை
முயல் பண்ணை அமைத்தது பற்றியும் அதன் மூலம் வருமானம் ஈட்டுவது பற்றியும் நம்மிடம் பேசிய வெங்கடேஷ், '' முயல் பண்ணை அமைத்தபோது சொந்தக்காரர்களே ஏளனமாக பேசினார்கள். இப்போது லட்சங்களில் மாத வருவாய் ஈட்டி வருகிறேன். ஒரு கிலோவில் இருந்து ஒன்றே முக்கால் கிலோ வரை கறி உள்ள ஒரு முயலை விற்பனை செய்தால் ரூ.1000 முதல் ரூ.1400 வரை விலை கிடைக்கிறது. பெரும்பாலும் இது போன்று தனியாக முயலை விற்பனை செய்ய மாட்டேன். மொத்தமாக தான் விற்பேன்''.

நல்ல விலை
மேலும் தொடர்ந்து பேசிய அவர், ''முயல் கறியை பொறுத்தவரை அதில் கொழுப்பு குறைவாக இருப்பதால் இதய நோயாளிகள் முதற்கொண்டு பலரும் சாப்பிடலாம். இது மற்ற இறைச்சிகளை விட மெருதுவானது. இதன் மூலமும் வருவாய் கிடைக்கிறது. இதேபோல் மருத்துவ ஆராய்ச்சிக்காகவும் முயல்களை விற்பனை செய்து வருகிறேன். முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மருத்துவ ஆராய்ச்சிக்காக முயல்களை பயன்படுத்துகின்றன. இது மட்டுமல்லாமல் முயல் பண்ணைகள் அமைக்க விரும்புவோர், வீட்டில் வளர்க்க விரும்புவோர் என பலரும் வாங்குவதால் வருமானத்திற்கு குறைவில்லை'' என மகிழ்ச்சி ததும்ப கூறுகிறார் கிருஷ்ணகிரி இளைஞர் வெங்கடேஷ்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications