கிருஷ்ணகிரியில் கள்ளக்காதலியுடன் ஜாலி... நண்பர்கள் பார்த்த அந்த வீடியோ... அடுத்து நடந்த ட்விஸ்ட்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை சேர்ந்தவர் திருமணமான 36 வயது பெண். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் கடந்த 8 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். இவர் ஒரு கூலி தொழிலாளியை காதலித்து வந்துள்ளார். அந்த கூலி தொழிலாளி கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதனை வீடியோவாக எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார். அந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதல் என்பது சமூகத்தின் சாபக்கேடாக இருக்கிறது. குறிப்பாக கணவனை பிரிந்து வாழும் பெண்கள் மற்றும் மனைவியை பிரிந்து வாழும் ஆண்கள் இந்த சிக்கலை அதிகம் எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக கணவனை பிரிந்து வாழும் பெண்கள், திருமணமான ஆண்களின் வலையில் விழுந்து கடைசியில் தவறான பாதையை தேடிக் கொள்கிறார்கள். அதுவும் 30 முதல் 40 வயது வரை உள்ள நடுத்தரவயது பெண்கள், தங்களுக்கு பாதுகாப்பு தேடுகிறார்கள்.

அவர்களுக்கு ஆறுதல் தருவதாகவும், உதவி செய்வதாகவும், நட்பு பாராட்டுவதாகவும் உள்ளே வரும் திருமணம் ஆன ஆண்கள், திருமணம் ஆகாத ஆண்கள், ஒரு கட்டத்தில் அவர்களிடம் எல்லை மீறுகிறார்கள். அதனை அந்த பெண்கள் எதிர்க்கவில்லை என்றால், பின்னர் அடிக்கடி எல்லை மீறுகிறார்கள். அதன்பின்னரே காதலில் விழுகிறார்கள். இந்த காதல் கள்ளக்காதலாக தொடர்கிறது.இந்த கள்ளக்காதலில் பொதுவெளியில் தெரிந்தால் அசிங்கம் என்பதால் இருவருமே சமூகத்திடம் மறைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தவறாக முடிவு என்பது தெரிகிறது. ஆனால் அதில் வெளியே வர முடியமால் தவறான முடிவு எடுக்கிறார்கள். அல்லது வில்லங்கமான சிக்கல் வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை சேர்ந்தவர் திருமணமான 36 வயது பெண். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் கடந்த 8 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் 3-ந்தேதி கிருஷ்ணகிரி அருகே திம்மசந்திரம் பகுதியை சேர்ந்த ஒருவரின் வீட்டுக்கு அந்த பெண் சமையல் வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த பெண்ணுக்கும், தொழிலாளியான குமரேசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதை குமரேசன் அந்த பெண்ணுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வந்துள்ளாராம். இதனிடையே அந்த பெண், அவருடன் உள்ள தொடர்பை துண்டித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர், அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதை அவர்கள், அந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பினாராம். இதுகுறித்து அவர்கள் அந்த பெண்ணிடம் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து அஞ்செட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரேசன் (வயது54), சபீர் (42), ஜமுனா (38) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications