Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர்களின் 28 வீடுகளுக்கு ஒரே நாளில் சீல் வைத்த அதிகாரிகள்.. குவிந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பல வீடுகள் உள்வாடகைக்கு விட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து உள்வாடகைக்கு விட்ட புகாரில் 28 பேருக்கு நோட்டீஸ் வழங்கியிருந்தனர் அதிகாரிகள். ஆனால் அவர்கள் வீடுகளை ஒப்படைக்காததால் நேற்று அதிகாரிகள் நேரடியாக சென்று அந்த குறிப்பிட்ட 28 வீடுகளுக்கு 'சீல்' வைத்தனர்.

கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இருக்கிறது. இந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 192 வீடுகள் உள்ளன. இங்கு அரசு அலுவலர்கள் மற்றும் இதர துறைகளில் பணிபுரிவோருக்கு குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் வீடுகள் இருக்கிறது.. தற்போது 150 வீடுகளில் அரசு அலுவலர்கள் வசித்து வருகின்றனர். 42 வீடுகள் காலியாக இருக்கின்றன.

Officials seal 28 houses of government employees in Krishnagiri in a single day

இதில் பல்வேறு வீடுகள் உள்வாடகைக்கு விட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் பறந்தன. இதையடுத்து வீடுகளில் ஒதுக்கப்பட்டவர்கள் குடியிருக்கிறார்களா? என்று கடந்த மார்ச் மாதம் ஓசூர் வீட்டு வசதி வாரிய பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள்.

அப்போது 28 அரசு ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை உள் வாடகைக்கு விட்டிருந்தது வீட்டு வசதி வாரிய பிரிவு அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், ஓசூர் பிரிவு சார்பில் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியது. ஆனால் நோட்டீஸ் அளித்து ஒரு மாதம் ஆகியும் யாரும் வீடுகளை காலி செய்யவில்லை.

இதையடுத்து நேற்று வீட்டுவசதி வாரிய ஓசூர் பிரிவு செயற்பொறியாளர் பாண்டியராஜன், உதவி வருவாய் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் அங்கு சென்றனர். அத்துடன் உள்வாடகையில் வசித்தவர்களின் பொருட்களை எடுக்கச்சொல்லி 28 வீடுகளுக்கும் 'சீல்' வைத்தார்கள்.

அப்போது, எங்களால் உடனே வீடுகளை காலி செய்ய இயலாது. ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள் என வீடுகளில் குடியிருந்தவர்கள் அதிகாரிகளிடம் கேட்டனர். கடந்த மாதமே வீடுகளில் உள் வாடகைக்கு இருப்பவர்களுக்கும், வீடுகள் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி விட்டோம். பின்னர் எதற்காக நீங்கள் காலி செய்யவில்லை? என பதில் கேள்வியை அதிகாரிகள் எழுப்பியதுடன், அவகாசம் அளிக்க மறுத்துவிட்டனர். சீல் வைக்கும் நடவடிக்கையின் போது ஓசூர் டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+