கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்து - 6 பேர் பலி
கிருஷ்ணகிரி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். வேனில் சென்ற 5 பேரும் பேருந்தில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி: காவிரிப்பட்டணம் பகுதியில் சாலையோரம் நின்ற அரசுப்பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோட்டில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற ஆம்னி வேன் அரசுப்பேருந்தின் பின்புறம் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 5 பேர் மற்றும் அரசு பேருந்தில் பயணித்த ஒருவர் பரிதாபமாக இறந்தனர்.
வேன் வேகமாக வந்து பேருந்து மீது மோதியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவிரிபட்டினர் காவல்துறையினர் இறந்தவர்கள் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments
English summary
Six killed in road accident near Krishnagiri Five people in the van and one in the bus were killed. Police rushed to the spot and recovered the body.
Story first published: Monday, February 1, 2021, 7:34 [IST]