கிருஷ்ணகிரி முதியவர் கொலையில் திடுக் தகவல்! நிர்வாணமாகவே வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்! யார் அவர்?
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே முதியவரை கொன்று அவரது 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதியவரின் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் நிர்வாணமாகவே வந்ததாக சொல்லப்படுகிறது.
ஊத்தங்கரை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாயி, இவருக்கு 75 வயதாகிறது. இவர் தனது மனைவியுடன் தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். இருவரும் விவசாயம் பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு முதியவர், நிலத்திற்கு காவலாக வெளியே படுத்துக் கொண்டிருந்தார்.

அவரது மனைவி வீட்டின் உள்ளே படுத்திருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர் நிர்வாணமாக தோட்டத்து வீட்டிற்கு வந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அவர் தூங்கிக் கொண்டிருந்த முதியவரை கல்லால் அடித்து தாக்கியுள்ளார்.
இதனால் அந்த முதியவர் வலியால் அலறியுள்ளார். அந்த நபரையும் தடுக்க முயன்றார். அப்போது கணவரின் அலறல் சப்தம் கேட்டு மனைவி கதவை திறந்து வெளியே வந்தார். உடனே அந்த மூதாட்டியை இந்த மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து அந்த மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த நபர் தப்பியோடிவிட்டாராம். பின்னர் ரத்த வெள்ளத்தில் இருந்த முதியவரையும், மூதாட்டியையும் ஊத்தங்கரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மூதாட்டிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சிங்காரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கிராமம் என்பதால் அங்கு சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் கொலையாளியை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் மூதாட்டி சொன்ன அடையாளங்களை வைத்து பிடிக்க போலீஸார் தேடி வருகிறார்கள்.
வயதான தம்பதியை தாக்கி முதியவரை கொன்றது மட்டுமல்லாமல் மூதாட்டியை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதியினர் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அந்த தம்பதிக்கு மகன், மகள்கள் இருக்கிறார்களா என்ற விவரமும் தெரியவில்லை.
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளில் நடந்த கொடூர கொலைகளை காணலாம்.
நவம்பர் 2024: திருப்பூர் மாவட்டம் செமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்ட வீட்டில் தனியாக வசித்த 78 வயது தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமத்தாள் (74), மகன் செந்தில்குமார் (44) ஆகிய மூவரும் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டனர். நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இவ்வழக்கில் 2025 மே மாதம் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஈரோடு சம்பவத்திலும் ஈடுபட்டிருந்ததாக ஒப்புக்கொண்டனர்.
மே 2025: ஈரோடு மாவட்டம் விளங்காட்டு வலசு (அல்லது மேகரையன் அருகே சிவகிரி) கிராமத்தில் தோட்ட வீட்டில் தனியாக வாழ்ந்த ராமசாமி (72), பாக்கியலட்சுமி (63) தம்பதியர் கொலை செய்யப்பட்டனர். 10 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. மரக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டது. மூன்று பேர் கைது; அவர்கள் முந்தைய திருப்பூர் மூன்று கொலை வழக்கிலும் தொடர்புடையவர்கள்.
மார்ச் 2025: ஓசூர் அருகே ஒன்னல்வாடி கிராமத்தில் லூர்துசாமி (70) மற்றும் அவரது மனைவி தனியாக வசித்த வீட்டில் கொலை செய்யப்பட்டு, வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. இரட்டைக் கொலை சம்பவமாக விசாரணை நடைபெற்றது.
பிப்ரவரி 2026: சென்னை புரசைவாக்கம் அரசப்பா தெருவில் தனியாக வசித்த 61 வயது பாலகிருஷ்ணன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications