ஆஹா! அற்புதமான செய்தி! கொரோனாவுக்கு பயந்து புகைப்பிடித்தலை விட்ட 10 லட்சம் பேர்!
லண்டன்: இங்கிலாந்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா காலகட்டத்தின்போது புகைப்பிடிப்பதை கைவிட்டுவிடுவார்கள் என ஒரு ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் லண்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் மற்றும் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு ஆய்வை நடத்தின. அந்த ஆய்வு ஏப்ரலின் மத்தியிலிருந்து ஜூன் இறுதி வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்டது.

இதில் 11 லட்சம் பேர் இந்த கொரோனா காலத்தில் புகைப்பிடித்தலை விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 16 வயது முதல் 29 வயதுடையவர்களில் 4 லட்சம் பேர் கொரோனா காலகட்டத்தில் தங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டார்கள். அது போல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் 2.40 லட்சம் பேர் விடுவித்தனர்.
ஏப்ரல் மாதம் முதல் 30 வயது முதல் 49 வயதுடையவர்களில் 4 லட்சம் பேர் புகைப்பிடித்தலை விட்டு விட்டனர். கொரோனா வைரஸ் நேரடியாக மூச்சு பிரச்சினையை கொடுப்பதால் ஏராளமானோர் புகைப்பிடித்தலை விட்டு விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் இளைஞர்களை பொருத்தமட்டில் வீட்டுக்குள் இருப்பதால் குழந்தைகள், குடும்பத்தினர் முன்பு சிகரெட் பிடிக்க அச்சப்பட்டு கொண்டு அந்த பழக்கத்தையே விட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள். எனினும் புகைப்பிடிப்போரின் எண்ணிக்கையோ இதைவிட 5 மடங்கு அதிகம் என்பது மிகவும் கவலைக்குரிய செய்தியாகும். வரும் 2030-ஆம் ஆண்டு பிரிட்டன் புகைப்பிடித்தாவர்களின் நாடாக விளங்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications