சிஏஏ குறித்து தவறான தகவல்.. விவாதத்தில் இந்தியாவை ஆதரித்து பேசிய இரு இந்திய வம்சாவளி எம்பிக்கள்
லண்டன்: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து மக்கள் மனதில் தவறான கருத்துகள் பரப்பப்பட்டதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு ஐரோப்பிய யூனியன் எம்பிக்கள் விவாதத்தில் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த வாரம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது நேற்று அதாவது இந்திய நேரப்படி இன்று அதிகாலை விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தை வெளியுறவு விவகாரங்கள் துறைக்கான ஐரோப்பிய தூதரகத்தின் துணைத் தலைவர் ஹெலேனா தல்லி தொடங்கி வைத்தார். இவர் இந்திய- ஐரோப்பிய யூனியன் இடையேயான நல்லுறவுகள் குறித்து வலுவான கருத்துகளை எடுத்துரைத்தார்.
இரு நாடுகளிடையே நடைபெறும் 15ஆவது மாநாட்டில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிரசல்ஸ் வருகையை மேற்கோள் காட்டினார். மேலும் தல்லி கூறுகையில் அரசியலமைப்பு சட்டத்தின் இணக்கத்தை மதிப்பிடுவது இந்திய உச்சநீதிமன்றத்தின் கடமை என நாங்கள் நம்புகிறோம்.
கடந்த வாரங்களில் நாட்டில் காணப்பட்ட பதற்றங்கள், வன்முறைகளை கட்டுப்படுத்த நீதித் துறையின் செயல்பாடுகள் கை கொடுக்கும் என நம்புகிறோம் என தனது உரையை முடித்தார். இந்த நிலையில் இரு இந்திய வம்சாவளி எம்பிக்கள் தினேஷ் தமிஜா, நீனா கில் ஆகியோர் இந்தியாவுக்கு ஆதரவான கருத்துகளை முன் வைத்தனர்.
அவர்கள் கூறுகையில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியன குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன என இந்தியாவுக்கு ஆதரவாக பேசினர். பிரெஞ்ச் எம்பி தேரி மரியானி பாகிஸ்தானுக்கு ஆதரவான சட்டம் என மறைமுகமாக விமர்சித்தார்.
மற்ற நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை மற்ற எம்பிக்கள் கண்டித்தனர். பாகிஸ்தான் வம்சாவளி எம்பி ஷஃபாக் முகமது உள்ளிட்டோர் குடியுரிமை திருத்தச் சட்டம் முற்றிலும் பாகுபாடானது என தெரிவித்தனர்.
-
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications