ஐசியூவில் போரிஸ் ஜான்சன்.. சப்ளையாகும் ஆக்ஸிஜன்.. உயிருக்கு போராடுவதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி
லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சையளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியானது.
Recommended Video
ஆனால், அமைச்சரவை விவகாரத்துறை அமைச்சர் மைக்கேல் கோவ் இதை மறுத்துள்ளார். அதேநேரம், ஐசியூவில் போரீசுக்கு ஆக்ஸிஜன் அளிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
தேசிய வானொலி நிலையமான எல்.பி.சி யிடம் பேசிய மைக்கேல் கோவ் "போரிஸ் வென்டிலேட்டரில் இல்லை. பிரதமருக்கு சில ஆக்ஸிஜன் சப்ளை கொடுக்கப்படுகிறது. தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். " என்று தெரிவித்தார்.

அமைச்சர் குடும்பம்
இந்த நேர்காணலுக்குப் பிறகு, மைக்கேல் கோவின் குடும்ப உறுப்பினருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கோவ் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுதான் பிரிட்டனின் தற்போதைய நிலை.

கர்ப்பம்
ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முன்பு, கொரோனா தாக்கிய முதல் உலகத் தலைவர்களில் ஒருவரான போரிஸ் ஜான்சன் மாறினார். அவர் தனிமைப்படுத்திக் கொண்டும் பலன் கிடைக்கவில்லை. எனவே, திங்களன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர சிகிச்சை வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்ஸ் கர்ப்பமாக உள்ளார், மேலும் அவருக்கும் கொரோனா தாக்கியிருந்தது. தற்போது அந்த அறிகுறிகளிலிருந்து மீண்டு வருகிறார்.
|
உயிருக்கு போராட்டம்
செவ்வாயன்று அனைத்து பிரிட்டிஷ் செய்தித்தாள்களின் முதல் பக்கங்களிலும், போரிஸுக்கு வழங்கப்படும் சிகிச்சை பற்றிய செய்திதான் இடம் பெற்றிருந்தது. "போரிஸ் தீவிர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்" என்று டெய்லி மெயில் ஹெட்லைன் கூறியது. டெய்லி மிரர் பத்திரிக்கையோ, தனது ஹெட்டிங்கில், sick Boris faces fight for life அதாவது, நோய்வாய்ப்பட்ட போரிஸ், உயிருக்காக போராடுகிறார் என்று தலைப்பிட்டிருந்தது.

பிரிட்டன் நிலை
பிரிட்டனில், 52,000த்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 5,373க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். இந்த நிலையில், போரிஸ் இப்படி ஒரு நிலையில் சிக்கி தவிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications