அடுத்த "தலைவலி".. இதோ "இந்த" 5 அறிகுறிகள் இருந்தால் கொரோனாவாம்.. அடுத்த குண்டை போட்ட ஆய்வு
5 அறிகுறிகள் இருந்தால் கொரோனாவைரஸ் தொற்று பாதிப்பு என்கிறார்கள்
லண்டன்: முக்கியமாக 5 அறிகுறிகள் இருந்தால், அது தொற்றுக்கான பாதிப்பாக இருக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த கொரோனாவைரஸ், எந்த மாதிரியான வைரஸ் என்றே தெரியாமல் 2 வருடங்களாகவே ஆய்வுகள் நடந்து வருகின்றன.. இதன் அறிகுறிகள் இவைதான் என்று ஒரு இறுதியான, உறுதியான முடிவுக்கும் வர முடியவில்லை..
இதற்கு மருந்தும் சிகிச்சை முறையும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.. இதற்கான முயற்சியில் லட்சக்கணக்கான விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
தொடங்கியது 3ஆம் அலை? மீண்டும் உயரும் கொரோனா.. அடுத்த 100 நாட்கள் மிக முக்கியம்.. புதிய வார்னிங்
ஆய்வு
இந்த ஆய்வுகளின்போது, கொரோனா வைரஸ் பற்றின புது புது தகவல்கள் கிடைத்துவருகின்றன.. அதன்படி, அரிசோனா பல்கலைக் கழகத்தில் இந்த வைரஸ் பற்றி ஒரு ஆய்வு நடத்தியதில் கிழக்கு ஆசியா பகுதிகளில் கொரோனாவைரஸ் 20,000 வருஷத்துக்கு முன்பே பரவியதாம்.. நம்முடைய முன்னோர்களையும் தாக்கிவிட்டதாம்.. உடனே அழியாமல் நீண்ட காலத்துக்கு இந்த வைரஸ் தங்கியிருந்திருக்கிறது.. இதற்கான ஆதாரங்களும் இருப்பதாக தெரிவிக்கிறார்கள்..
ரிப்போர்ட்
இப்போது இன்னொரு தகவலும் இதுகுறித்து வேறு ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.. இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை நடத்தி இருக்கிறார்கள்.. கொரோனா அறிகுறிகள் தொடர்பாக நடந்த ஆய்வு இது.. இதன் முடிவை "ராயல் சொசைட்டி ஆப் மெடிசின்" என்ற பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.
மூக்கு ஒழுகுதல்
அதில் 5-க்கும் மேற்பட்ட அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்புக்கு ஒருவர் ஆளாகி இருந்தால், அவர் மாதக்கணக்கில் தொற்றினால் மிக மிக அவதிப்பட நேரிடும் என்று எச்சரிக்கிறார்கள்.. குறிப்பாக உடல் சோர்வு, தலைவலி, மூக்கு ஒழுகுதல், இருமல், நாசி நெரிசல் ஆகியவற்றுடன் சுவாச கோளாறு இருந்தால் நீண்ட காலம் கொரோனா பாதிப்பு இருக்கும் என தெரிய வந்துள்ளது.
கிலி
இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர், கொரோனாவால் 8 வாரங்களுக்கு மேலாக மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்... இந்த 2 வருடத்தில் கொரோனா அறிகுறியில் தலைவலியும் சேர்ந்துள்ளது, பரவலாக கிலியை கிளப்பி கொண்டிருக்கிறது.