கொரோனோ.. ஸ்பெயினில் 10 ஆயிரத்தை தாண்டியது இறப்பு எண்ணிக்கை
லண்டன்: ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதித்தோரின் இறப்பு எண்ணிக்கை வியாழக்கிழமையான இன்று, 10,000 ஐத் தாண்டியது. கொரோனா பரவ ஆரம்பித்ததில் இருந்து ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் ஸ்பெயினில் இன்று பதிவாகியுள்ளது. மொத்தம் 950 பேர் ஸ்பெயினில் இன்று உயிரிழந்தனர்.
110,238 பேர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் ஈரானின் இறப்பு எண்ணிக்கை 3,160 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரசால் ஈரானின் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 124 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் கியானுஷ் ஜஹான்பூர் அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
"பாதிக்கப்பட்ட நிலையில் 3,956 பேர் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,875 புதிய நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 16,711 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர்" என்று ஜஹான்பூர் கூறினார்.












Click it and Unblock the Notifications