பேஷ் பேஷ்.. இளைஞர்கள், முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுதாம் ஆக்ஸ்போர்ட் வாக்சின்!
ஆக்ஸ்போர்ட் வாக்சின் தொடர்பான செய்தியை அஸ்ட்ரஜெனகாதெரிவித்துள்ளது
லண்டன்: ஆக்ஸ்போர்ட் வாக்சின் தொடர்பான மகிழ்ச்சி செய்தியை அஸ்ட்ரஜெனகா தெரிவித்துள்ளது. அதாவது இளைஞர்கள், முதியோரிடத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை சரியான முறையில் அது தூண்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரஜெனகா இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்ட் வாக்சின், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மருத்துவப் பரிசோதனையில் இருந்து வருகிறது.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனம்தான் அஸ்ட்ரஜெனகா. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த வாக்சினை தயாரித்து அதை பரிசோதனை செய்து வருகிறது இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த வாக்சினுக்கு ChAdOx1 என்று பெயர்.
இடையில் ஏற்பட்ட சில தடங்கல்கள் காரணமாக சோதனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அக்டோபர் 22ம் தேதி முதல் உலக அளவில் இந்த சோதனை மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சோதனையின் லேட்டஸ்ட் நிலவரம் குறித்து அஸ்ட்ரஜெனகா செய்தித் தொடர்பாளர் சொல்லும்போது, வயதானவர்கள் மற்றும் இளைஞர்களிடம் இந்த தடுப்பு மருந்தானது நோய் எதிர்ப்பு சக்தியை நன்றாக தூண்டி விடுகிறது. அதேசமயம், மிகவும் வயதானவர்களிடம் இது சற்று குறைவாகவே உள்ளது.
இதுதொடர்பாக பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு (அவரது பெயர் குறிப்பிடப்படவில்லை, அடையாள எண் AZD1222) நோய் எதிர்ப்பு சக்தி நன்றாகவே தூண்டப்பட்டது" என்றார் அவர். இவரது இந்த கூற்று முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இளைஞர்கள் மட்டுமல்லாமல் வயதானவர்களுக்கும் உகந்ததாக இந்த வாக்சின் விளங்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது, நம்பிக்கையும் கூடியுள்ளது.. காரணம் முதியோர்கள் பலர் உயிரிழப்பதை இது தடுக்க முடியும் என்பதால்.
கடந்த ஜனவரி முதல் இந்த வாக்சின் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. சிம்பன்சி குரங்கிலிருந்து எடுக்கப்பட்ட வைரஸின் பலவீனமான வடிவத்திலிருந்து உருவாக்கப்பட்டதுதான் இந்த வாக்சின் என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த வைரஸ் சோதனையில் இந்தியாவும் இணைந்துள்ளது.. இந்தியாவில் இந்த சோதனையை புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் மேற்கொள்கிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications