கொரோனா நெருக்கடியில்.. இந்தியாவிடம் இருந்து உலக நாடுகள் கற்று கொள்ள வேண்டும்.. சார்லஸ் பாராட்டு
லண்டன்: கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நிலையான எதிர்காலத்தை எப்படி உருவாக்குவது என்பது குறித்து இந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
லண்டனில் இந்தியா குளோபல் வீக் எனும் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இளவரசர் சார்லஸ் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் கலந்து கொண்டார்.

சந்தை
அப்போது அவர் பேசுகையில் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்த நெருக்கடியில் இருந்து உலகை மீண்டும் கட்டமைக்க வேண்டும். இயற்கை, சமூக, மனித மற்றும் உடல் மூலதனத்தின் சமநிலையின் மூலம் நீண்ட கால மதிப்பை உருவாக்கும் நிலையான சந்தைகளை நோக்கி செல்லும் வாய்ப்பு உள்ளது.

முதலீடு
மூலதனத்தின் 4 வடிவங்களில் முதலீடு செய்வது வாழ்க்கைத் தரத்தையும் நல்வாழ்வையும் எல்லா இடங்களிலும், குறிப்பாக ஏழ்மையான மக்களுக்கு நிலையான வழியில் உயர்த்த முடியும். நிலையான வாழ்க்கையின் முக்கியத்துவம் குறித்து நான் இந்திய பிரதமர் மோடியுடன் பேசியுள்ளேன். தன்னை புதுப்பித்துக் கொள்ள முற்படும் போது உலகம் இந்தியாவிடம் இருந்து அபரிகிரகா என்ற பண்டைய யோக ஞானத்தை கற்றுக் கொள்ள வேண்டிய நேரமிது.

அவசியம்
(அபரிகிரகா என்பது பேராசையில்லாத தன்மை). இந்தியா எப்போதும் இதை புரிந்து கொண்டு அதன் தத்துவமும் மதிப்புகளும் நிலையான வழியை வலியுறுத்துகின்றன. அபரிகிரகா யோக கொள்கை, வாழ்க்கையின் குறிப்பிட்ட கட்டத்தில் அவசியமானவற்றை மட்டுமே வைத்துக் கொள்ள நம்மை ஊக்குவிக்கிறது.

நெருக்கடி
பண்டைக்கால ஞான உதாரணங்களில் இருந்து நாம் கற்றுக் கொள்ள முடியும். இங்கிலாந்தில் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தோருடன் நான் நிறைய விவாதங்களை நடத்தியுள்ளேன். ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் இந்தியாவின் பங்களிப்புக்கான லட்சியத்தால் நான் எப்போதும் பெரிதும் ஊக்குவிக்கப்படுகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் இதுகுறித்து அனைவருக்கும் கற்பிக்க வேண்டியது அதிகம் என நம்புகிறேன் என்று சார்லஸ் தெரிவித்தார்.
-
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்!












Click it and Unblock the Notifications