இது வானவில்லா? வில்லை காணோமே.. வெறும் கோடு தான் இருக்கு.. ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்!
அரியவகை நேரான வானவில் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன.
லண்டன்: இங்கிலாந்தில் தோன்றிய அரியவகை நேரான வானவில் புகைப்படங்கள் நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இயற்கையின் அற்புதங்களில் ஒன்று வானவில். மழைகாலங்களில் வானில் தென்படும் வண்ணமயமான வானவில்லை பார்ப்பதற்கு கண்கள் இரண்டு பத்தாது. அந்த அளவுக்கு நமக்கு குதூகலத்தை ஏற்படுத்தக்கூடியவை அவை. வானவில்லைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். சிறுவயது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வானவில்லைப் பார்த்து விட்டால் குஷியாகி விடுவார்கள்.

பொதுவாக நம் கண்ணில் தென்படும் வானவில் வளைவாகத்தான் இருக்கும். அதன் காரணமாகவே அவற்றிற்கு வானவில் என பெயரிட்டனர் நம் முன்னோர்கள். ஆனால் பூமியின் சமதளத்தில் நேர் கோடாக காட்சியளிக்கும் வானவில்லை பார்த்ததுண்டா? இங்கிலாந்து நாட்டில் அப்படிப்பட்ட ஒரு வானவில் தோன்றி இருக்கிறது.
தார்குவே நகரில் உள்ள பெய்குதான் கடற்கரையில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்களில், நீலக் கடலுக்கு மேற்புறத்தில் நேர் கோடாகக் காட்சியளிக்கிறது அந்த வானவில். சூரிய ஓளி மற்றும் கடற்காற்றின் காரணமாக இதுபோல் நேர் கோடாக வானவில் தோன்றியிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
எது எப்படியோ வானவில்லை பார்ப்பதே மனதுக்கு மகிழ்ச்சியான விஷயம் தான். அதிலும் இப்படி நேர் கோடாக காட்சியளிக்கும் வானவில்லை பாக்கும் போது மனம் குதூகலத்துடன் ஆச்சர்யமும் தொற்றிக் கொள்கிறது.












Click it and Unblock the Notifications