உத்தரகண்ட் பனிப்பாறை வெடிப்பு... தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார்.. பிரிட்டன் பிரதமர் உறுதி
லண்டன்: உத்தரகண்ட் பனிப்பாறை வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரி செய்ய தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை திடீரென்று சரிந்து விழுந்தது. இதன் காரணமாக அங்குள்ள தவுலிகங்கா மற்றும் ரிஷிகங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் உயிரிழந்த 14 பேரின் உடல்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளன.
மேலும் மாயமான 100க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வெள்ளப்பெருக்கு மிகக் கடுமையாக உள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தெரிவித்துள்ளார்.

போரிஸ் ஜான்சன் ட்வீட்
பனிப்பாறை வெடிப்பு காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக தலைவர்கள் பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், "உத்தரகண்டில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளவர்கள் குறித்தும், இந்தியா குறித்துமே எனது சிந்தனை உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவுடன் பிரிட்டன் துணை நிற்கும்
மேலும், இந்தியாவுடன் பிரிட்டன் துணை நிற்கும் என்றும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதேபோல பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோனும், "உத்தரகண்டில் பனிப்பாறை வெடிப்பு காரணமாக மாயமான 100 பேர் மாயமாகியுள்ளனர். எங்கள் சிந்தனை அவர்களைப் பற்றியே உள்ளது" என்று பதிவிட்டிருந்தார்.

12 பேர் மீட்பு
மீட்புப் பணிகளை மேற்கொள்ளத் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர், மறுபுறம் இந்தோ திபத் காவல் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஆற்றின் அருகே அமைந்திருந்த சுரங்கம் ஒன்றில் சிக்கியிருந்த 12 பேரை இந்தோ திபத் காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.

நீர்மின் நிலைய கட்டுமான பணிகள்
அதேபோல தபோவன் அணையின் குறுக்கே சுமார் 3,000 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வந்த விஷ்ணுகாட் நீர்மின் நிலைய கட்டுமானமும் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்தக் கட்டுமானத்தில் பணிபுரிந்த சுமார் 125 பேரை காணவில்லை என்று உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications