வாக்கெடுப்பு ஒத்திவைப்பு.. இந்தியாவுக்கு கிடைத்த ராஜாங்க வெற்றியா?
லண்டன்: குடியுரிமை சட்டம் குறித்த வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது இந்தியாவுக்கு கிடைத்த ராஜாங்க வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
குடியுரிமை சட்டம் குறித்து கடந்த வாரம் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது அதன் மீதான விவாதம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது.
சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் பல்வேறு எம்பிக்கள் சிஏஏ ஆதரவாகவும் பாகிஸ்தான் வம்சாவளியினர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர். இன்னும் சிலர் நடுநிலையான கருத்துகளை தெரிவித்தனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம்
இந்த விவாதத்தை தொடர்ந்து இன்று வாக்கெடுப்பு நடத்தப்படுவதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் வாக்கெடுப்பு திடீரென மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இனி வரும் காலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும்.

கோரிக்கை
அப்போது சட்டப்படி அனைவரும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். தெளிவான முடிவுகள் கிடைக்கும் வரை வாக்கெடுப்பை ஒத்திவைப்பது சிறந்தது என தெரிவித்தார். ஆனால் இதை ஏற்க சில எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

உள்நாட்டு விவகாரம்
இந்த வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது இந்தியாவுக்கு சர்வதேச அளவில் ராஜாங்க ரீதியில் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் தீர்மானம் கொண்டு வரப்பட்டது முதல் இதை இந்தியா எதிர்த்து வருகிறது. மேலும் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறி வந்தது.

இந்திய நண்பர்கள்
இந்த தீர்மானங்கள் இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையேயான நட்புறவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் இவர்களது தீர்மானம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் இந்திய அரசு உறுதிப்பட தெரிவித்துவிட்டது. வாக்கெடுப்பு ஒத்திவைப்பு குறித்து டெல்லி வட்டாரங்கள் கூறுகையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாக்கெடுப்பு ஒத்திவைப்பு என்பது ராஜாங்க ரீதியாக இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியாகும். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானை விட இந்தியாவின் நண்பர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்றன.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications