சோதனை செய்தது உண்மைன்னா.. நாட்டின் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?.. அகிலேஷ்
லக்னோ: இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னரே பல்வேறு விமான நிலையங்களில் சோதனை நடத்தப்பட்டு அவர்களில் யாருக்கும் கொரோனா இல்லாத நிலையில் நாட்டின் முதல் கோவிட் 19 பாதித்த நபர் எப்படி கண்டுபிடிக்கப்பட்டார் என சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டிவிட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், நாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாத போதே பல்வேறு விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வருவோரிடம் சோதனை நடத்தப்பட்டு விட்டதாக கூறுகிறார்கள்.
ஆனால் எனது கேள்வி என்னவெனில் விமான நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் எத்தனை அர்த்தமுள்ளது, தீவிரமானது என்பதுதான். அனைவரையும் தீவிரமாக பரிசோதனை செய்தது உண்மையெனில் நாட்டில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.
நிச்சயம் தீவிர சோதனை செய்திருந்தால் நாடு நிச்சயம் பலன் பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 558 ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications