Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எனது உயிருக்கு ஒரு பாஜக தலைவரால் ஆபத்து.. என்னை கொல்ல சதி.. அகிலேஷ் யாதவ் பரபரப்பு புகார்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: எனது உயிருக்கு பாஜக தலைவர்களால் ஆபத்து என தொலைபேசி அழைப்பு வந்ததாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் முன்னாள் உத்தரப்பிரதேச மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ், நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது குறித்து கன்னோஜில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் குறுக்கிட்டு நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அதற்காக என்ன செய்ய திட்டமிட்டுள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார். அவர் கூறியது அகிலேஷுக்கு கேட்காததால் அந்த இளைஞரை அருகில் அழைத்தார். அப்போது அந்த இளைஞர் ஜெய்ஸ்ரீராம் என முழங்கினார்.

Akhilesh Yadav claims threat to his life from BJP leader

நீங்கள் பாஜகவை சேர்ந்தவரா என கேட்டார் அகிலேஷ். அதற்கு அந்த இளைஞர் ராமர், கிருஷ்ணர், விஷ்ணு, சிவன் ஆகிய அனைத்து தெய்வங்களையும் நான் போற்றுவேன் என அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இதுகுறித்து போலீஸ் அதிகாரியிடம் அகிலேஷ் புகாராக கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் இரு நாட்களுக்கு முன்னர் பாஜ தலைவர் ஒருவர் என்னை போனில் மிரட்டினார். தற்போது அந்த இளைஞர் பாதுகாப்பு வளையத்தை தாண்ட முயற்சித்துள்ளார்.

அவர் என்னை கொல்ல முயற்சிக்கலாம். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். எந்த பிரிவின் கீழ் அவர் மேல் வழக்கு பதிவு செய்ய உள்ளீர்கள் என கேட்டார். அந்த நபர் குக்ராபூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்த் சுக்லா என தெரியவந்தது. அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கான்பூரில் சட்டப்படிப்பு படித்து வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+