ஒரு புறாவுக்கு அக்கப்போரா? கல்யாண வீடே ரணகளமாயிடுச்சே.. ஒரு உயிரும் போயிடுச்சே.. ஆமா, அதென்ன ரசகுல்லா
குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் திருமண வீட்டில் 'ரசகுல்லாவை' எடுத்து சாப்பிட்டதால் ஏற்பட்ட சண்டையில் பெண் வீட்டை சேர்ந்த 50 வயது முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருமண வீடுகளில் கொண்டாட்டங்களை போலவே சலசலப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது. எங்கிருந்து யார் பஞ்சாயத்தை தொடங்குவார்கள் என்றே தெரியாது. அப்படி திடீரென ஏதாவது ஒரு பிரச்சனை மாப்பிள்ளை வீட்டிலிருந்தோ, பெண் வீட்டிலிருந்தோ தொடங்கிவிடும். இப்பிரச்சனைகள் தொடக்கத்தில் சிரிப்பாக இருந்தாலும் இறுதியில் மிகவும் சீரியஸான விளைவுகளை ஏற்படுத்திவிடும். அப்படி ஒரு பஞ்சாயத்து ரசகுல்லாவிலிருந்து தொடங்கியிருக்கிறது.
ஹரியானாவை சேர்ந்த இளம்பெண்ணுக்கு குடும்பத்தினர் கடந்த சில மாதங்களாக வரன் பார்த்து வந்துள்ளனர். அப்படி இருக்கையில், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தில் வரன் அமைந்திருக்கிறது. வழக்கமான முறைப்படி முதலில் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டு வந்து சென்றுள்ளனர். அதன் பின்னர் பெண் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை வீட்டார் அங்கு வைத்து திருமண தேதியை முடிவு செய்து திருமணத்தை உறுதி செய்துள்ளனர்.

திருமணம்
இதனையடுத்து நேற்று ஆக்ராவில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்காக ஹரியானாவிலிருந்து ஆக்ராவுக்கு பெண் வீட்டாரின் உறவினர்கள் பலர் வந்திருக்கின்றனர். பெண்ணின் சொந்த ஊர் கிரமாப்புற பகுதி என்பதால் அவர்கள் ஊரிலிருந்து வந்தவர்களுக்கு இந்த திருமணம் பிரமாண்டமானதாக இருந்திருக்கிறது. இப்படி இருக்கையில் இரவு உணவில் ஸ்பெஷலாக ரசகுல்லா பரிமாறப்பட்டிருக்கிறது. ரசகுல்லாவை யார்தான் விரும்ப மாட்டார்கள்? எனவே திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் ரசகுல்லா மீது ஒரு கண் இருந்திருக்கிறது. சாப்பிட்டு முடித்த பின்னரும் ரசகுல்லா வாளியை தேடி தேடி காலி செய்துள்ளனர்.

ரசகுல்லா
இதனால் பாதி பந்தியிலேயே ரசகுல்லாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. மறுபுறம் சாப்பிட அமர்ந்திருந்தவர்கள் ரசகுல்லா கூட முழுசா வைக்க மாட்டீங்களா என கேள்வியெழுப்ப தொடங்கிவிட்டனர். இதனையடுத்து ரோஷமடைந்த மாப்பிள்ளை வீட்டார் வெளியிலிருந்து மீண்டும் கூடுதலாக ரசகுல்லாக்களை வாங்கி வந்து பரிமாறியுள்ளனர். இப்படி இருக்க பெண் வீட்டாரும் ரசகுல்லா வாளிக்கு கூடுதல் பாதுகாப்பு அளித்துள்ளனர். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது இத்தனை பேர் பாதுகாப்பு இருக்கும்போதே ரஜத் எனும் இளைஞர் ஒருவர் ரசகுல்லாவை அசால்ட்டாக எடுத்து சாப்பிட்டுள்ளார்.

சண்டை
இதனை கண்ட பெண் வீட்டு தரப்பினர் "ஏம்பா இப்படி பண்றீங்க. இங்க ஏற்கெனவே ரசகுல்லாவுக்கு சண்ட போயிட்டு இருக்கு, இதுல நீ வேறயா?" என கேள்வியெழுப்பியுள்ளனர். அவ்வளவுதான் சண்டைக்கான புள்ளி விழுந்துவிட்டது. ரஜத் தனது தரப்பில் ஆட்களை கூப்பிட பெண் வீட்டாரும் நாலைந்து பேர் ஒன்று சேர்ந்தனர். ஆனால் ரஜத் தரப்பினர் கையில் கம்புடன் வந்திருந்ததால் அவர்களை பெண் வீட்டாரால் சமாளிக்க முடியவில்லை. சண்டை முடிவில் பெண் வீட்டு தரப்பில் 50 வயதான ரன்வீர் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட ரஜத் குழுவினர் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

வழக்குப்பதிவு
சம்பவத்தையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் ரண்வீர் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து மெயின்புரி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் கூறுகையில், "இந்த மோதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். கடைசியாக அவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கிய ரசகுல்லாவை யாரும் சாப்பிடாததால் கீழே கொட்டப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications