மரத்துப்போன மனிதம்... மிருகங்களை விட மோசமாக நடத்தப்படும் மனிதர்கள்... ஆக்ராவில் வெடித்த சர்ச்சை
லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் மிருகங்களை விட மிக மோசமாக நடத்தப்பட்ட விதத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
Recommended Video
ஆக்ராவில் கோரண்டைன் மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானோருக்கு மிருகக்காட்சி சாலையில் உணவு வைக்கப்படுவதை போல் இரும்பு கேட்டிற்கு முன் பிஸ்கட்கள் தூக்கிவீசப்படும் காட்சி காண்போரை கொதிப்படைய செய்கிறது.
கொரோனா நோயாளிகளை சக மனிதர்கள் அணுகுவது குறித்து மத்திய மாநில அரசுகள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததே இது போன்ற சமூக ஒதுக்கல் நிகழ்வுகளுக்கு வழி வகுக்கிறது.

கோரண்டைன் மையம்
உத்திரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தனிமைப்படுத்தல் மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு நூற்றுக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு அளிக்கப்படும் காட்சி தான் தேசிய அளவில் வைரலாகி உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சர்ச்சையில் சிக்கவைத்துள்ளது.

தூக்கி வீசுதல்
ஆக்ராவில் கோரண்டைன் மையம் ஒன்றில், மிருகக்காட்சி சாலைகளில் மிருகங்களுக்கு உணவு வைக்கப்படுவதை போல் இரும்பு கேட்டின் முன்பு தண்ணீர்பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்கள் தூக்கி வீசப்படுகின்றன. அதனை எடுப்பதற்காக ஒன்றாக கூடி நின்று ஒருவருக்கு ஒருவர் போட்டி போடுகின்றனர். இதேபோல் அவர்களுக்கு வழங்கப்படும் தேநீர் உள்ளிட்ட பானங்களும் இரும்பு கேட்டின் வெளியே ஒரு கட்டில் போடப்பட்டு அதில் வைக்கப்படுகிறது.

தவறான அணுகுமுறை
நாடு தழுவிய அளவில் கொரோனா நோயாளிகளை அணுகும் விவகாரத்தில் மக்கள் மத்தியில் அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாதன் விளைவே இது போன்ற கொடூர நிகழ்வுக்கு சான்றாகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய எதிர்ப்பது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு பூரண நலம்பெற்ற பின்னரும் அவர்களை ஒதுக்கி வைப்பது போன்ற அவலங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

கனிவான வார்த்தை
இதனிடையே மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுவதை அறிய முடிகிறது. கொரோனா நோயாளிகளிடம் கனிவான வார்த்தைகளால் நம்பிக்கை அளிப்பதுடன், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆகாரங்கள் அளிக்கப்படுகின்றன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications