உ.பி, குஜராத் இடைத்தேர்தல்களிலும் பாஜக வேட்பாளர்கள் அமோக முன்னிலை
லக்னோ/காந்திநகர்: உத்தரப்பிரதேசம், குஜராத் மாநிலங்களின் சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் பாஜக வேட்பாளர்கள் அமோக வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் 7, குஜராத்தில் 8 தொகுதிகளுக்கு நவம்பர் 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இரு மாநிலங்களிலும் தொடக்கம் முதலே பாஜக வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் அமோக வாக்குகளுடன் முன்னிலை பெற்றனர். இதனால் பாஜக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
குஜராத்தில் 7 தொகுதிகளில் பாஜகவும் 1 தொகுதியில் காங்கிரஸும் முன்னிலை வகித்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் 7 தொகுதிகளில் 4-ல் பாஜக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகியவை தலா 1 தொகுதியில் முன்னிலை வகித்து வருகின்றன.
தமிழகத்தை போலவே.. பீகாரிலும் சொந்த கூட்டணியை கீழே இழுத்துவிட்ட காங்கிரஸ்.. பாஜக கூட்டணி முன்னிலை
இந்த 15 தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் கணித்திருந்தன.