டெல்லியில் இருந்து திரும்பியவருக்கு கொரோனா.. 14 கிராமங்களை சீல் வைத்த உ.பி. அரசு
லக்னோ: டெல்லி மத மாநாட்டுக்கு சென்று திரும்பியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிய 14 கிராமங்களுக்கு உத்தரப்பிரதேச போலீசார் சீல் வைத்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தின் பதாவுன் மாவட்டம் பவானிபூர் ஹாலி பகுதியில் மசூதி ஒன்றில் ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தங்கி இருந்தார். டெல்லி நிஜாமுதீனில் கடந்த மாதம் நடைபெற்ற மத மாநாட்டிலும் அந்த இளைஞர் பங்கேற்றவராம்.

தற்போது அந்த இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த இளைஞர் தங்கியிருந்த பகுதியில் 3 கி.மீ. சுற்றளவில் 14 கிராமங்கள் சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று மாவட்ட நீதிபதி குமார் பிரஷாந்த் கூறினார்.
உத்தரப்பிரதேசத்தின் பதாவுன் மாவட்டத்தில் மட்டும் 134 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 60 பேர் டெல்லி மத மாநாட்டில் பங்கேற்றவர்கள். ஒட்டுமொத்தமாக உ.பி.யில் 483 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கொரோனாவால் 5 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவுக்கு 308 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications