உ.பி.யில் அடுத்த அதிர்ச்சி.. உயிரிழந்தவரின் உடல் ஜேசிபி மூலம்.. எடுத்துச் செல்லப்படும் வீடியோ வைரஸ்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடல் ஜேசிபி வாகனம் மூலம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனா உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை மே மாதம் அதிகமாக இருந்தது.

Family uses earthmover to shift COVID-19 victim for burial

உத்தரப் பிரதேசத்தில் அப்படி உயிரிழப்பவர்களின் உடல்களைக் கங்கை நதியில் வீசியெறியும் அவலமும் நடந்தது. இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக, கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடல் ஜேசிபி வாகனம் மூலம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து உயிரிழந்த அந்த நபரின் மகன் கூறுகையில், "கோரக்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் எனது தந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பிறகுக் கிராமத்தில் உள்ள வீட்டில் உயிரிழந்தார். எல்லா இடங்களிலும் இப்படிதான் சடலங்களை எடுத்துச் செல்கிறார்கள் என நாங்கள் நினைத்தோம்" என அவர் தெரிவித்தார்.

இது குறித்து கிராம தலைவர் திரியோகானந்த் கவுதம் கூறுகையில், "உ.யிரழந்தவரின் உடலை அவரது சொந்த பிள்ளைகளே தொட மறுத்துவிட்டனர். அதனால், வேறு வழியின்றி நாங்கள் தான் இதற்கு ஏற்பாடு செய்தோம்" என்று அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+