உ.பி.யில் அடுத்த அதிர்ச்சி.. உயிரிழந்தவரின் உடல் ஜேசிபி மூலம்.. எடுத்துச் செல்லப்படும் வீடியோ வைரஸ்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடல் ஜேசிபி வாகனம் மூலம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் கொரோனா உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், டெல்லி போன்ற மாநிலங்களில் வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை மே மாதம் அதிகமாக இருந்தது.

உத்தரப் பிரதேசத்தில் அப்படி உயிரிழப்பவர்களின் உடல்களைக் கங்கை நதியில் வீசியெறியும் அவலமும் நடந்தது. இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவமாக, கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடல் ஜேசிபி வாகனம் மூலம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து உயிரிழந்த அந்த நபரின் மகன் கூறுகையில், "கோரக்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் எனது தந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பிறகுக் கிராமத்தில் உள்ள வீட்டில் உயிரிழந்தார். எல்லா இடங்களிலும் இப்படிதான் சடலங்களை எடுத்துச் செல்கிறார்கள் என நாங்கள் நினைத்தோம்" என அவர் தெரிவித்தார்.
இது குறித்து கிராம தலைவர் திரியோகானந்த் கவுதம் கூறுகையில், "உ.யிரழந்தவரின் உடலை அவரது சொந்த பிள்ளைகளே தொட மறுத்துவிட்டனர். அதனால், வேறு வழியின்றி நாங்கள் தான் இதற்கு ஏற்பாடு செய்தோம்" என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications