ரத்தத்தில் தண்ணீரை கலந்து 1000 பேருக்கு விற்பனை செய்த கும்பல்.. உபியில் கைது
ரத்தத்தில் தண்ணீரை கலந்து 1000 பேருக்கு விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

லக்னோ : எச்.ஐ.வி சோதனை செய்யாமல், குளுக்கோஸ் தண்ணீரைக் கலந்து கலப்பட ரத்தத்தை முறைகேடாக விற்பனை செய்து வந்த மோசடிக் கும்பலை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த லேப் டெக்னீசியன்கள் முகமது நசீம் மற்றும் ராகவேந்திர சிங். கடந்த ஆறு மாதங்களாக இவர்கள் போலியான ரத்த வங்கி ஒன்றை நடத்தி வந்துள்ளனர். அவசரத் தேவைக்காக பணம் கேட்டு வரும் ஏழைகள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களிடம் ரூ. 500 பணம் கொடுத்து ஒரு யூனிட் ரத்தத்தை எடுத்துள்ளனர்.

பின்னர் அந்த ரத்தத்துடன் குளுக்கோஸ் தண்ணீரைக் கலந்து இரண்டு யூனிட்டாக்கி அதனை மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்துள்ளனர். ஒரு யூனிட் ரத்தத்தை அவர்கள் ரூ. 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரை விற்பனை செய்து வந்துள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக இந்த மோசடியை அவர்கள் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் இவர்களிடம் வாங்கிய ரத்தம் வித்தியாசமாக இருப்பதாக ஒரு மருத்துவமனை நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆய்வகத்தில் அந்த ரத்தத்தை ஆய்வு செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இந்த கலப்பட ரத்தம் விற்பனை விவகாரம் தொடர்பாக போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கலப்பட கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட முகமது நசீம் உட்பட கும்பலில் இருந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு விற்கப்பட்ட ரத்தம் எச்.ஐ.வி உள்ளிட்ட எந்த மருத்துவ பரிசோதனையும் செய்யாமல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், 'அரசு அங்கீகாரம், முத்திரை உள்ளிட்ட அனைத்தையும் போலியாக தயார் செய்து, அசல் ரத்த வங்கி உறையை போன்றே தயார் செய்து ரத்தம் விற்பனை செய்யும்போது பயன்படுத்தியுள்ளனர். அனைத்தும் கச்சிதமாக இருந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்தக் கலப்பட ரத்தம் ஏற்றப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’ என அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த கலப்பட ரத்தம் மோசடி உத்தரப் பிரதேசத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆறு மாதத்தில் மருத்துவ தேவைக்காக ரத்தம் ஏற்றிக் கொண்ட பலரும், தங்களுக்கும் கலப்பட ரத்தம் ஏற்றப்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர்.
-
ஈரான் எதிர்பாராத அட்டாக்.. பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெரிய கேஸ் ஆலைகள் மூடல்! உலகிற்கே பாதிப்பு -
ராகுலுக்கு செக்.. செங்கோட்டையை நோக்கி ‘சூரியன்’.. ஸ்டாலினின் 3வது அணி ரெடி.. உடையும் இந்தியா கூட்டணி -
வேற யாராவதுன்னா ஜெயில்தான்.. விஜய்யை கட்டிப்போட்ட அந்த 25 பேஜ்.. அதிர்ச்சி தரும் 4 முக்கிய புகார்கள்! -
வாயை கூட திறக்காத சீனா.. ஈரான் விவகாரத்தில் ட்விஸ்ட் கொடுக்கும் ஜின்பிங்.. என்ன மேட்டர் தெரியுமா? -
99% எல்லாம் ஓவர்.. 24 மணி நேரம்தான் டைம்.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் டெட் லைன்.. காங்கிரஸ் ஷாக் -
இஸ்ரேலை நோக்கி.. செஜில் வகை ஏவுகணைகளை வீச தொடங்கியது ஈரான்! ரொம்ப கஷ்டம்! -
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! -
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
ஈரான் தாக்குதலில் தப்பிய இஸ்ரேல் பிரதமர்.. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து பேட்டி! -
இந்திய அணி ஏமாற்றி வென்றுவிட்டது.. ஹெட்மயர் விக்கெட்டில் ஐசிசி தில்லு முல்லு.. முகமது ஆமீர் புகார்! -
உளவுத்துறையை விட மோசம்.. சங்கீதா, சஞ்சய் போட்ட போடு.. அப்படியே அடங்கிய விஜய்.. இப்படி வேற நடக்குதா?












Click it and Unblock the Notifications