டபுள் என்ஜின் இல்லை.. ட்ரிபிள் என்ஜின் அரசு உ.பியில் விரைவில் அமையும்! யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் இன்று தொடங்கும் நிலையில், மாநிலத்தில் டபுள் என்ஜின் அரசுக்கு பதிலாக ட்ரிபிள் என்ஜின் அரசு அமையும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இதற்கு முன்னர் மாநிலத்தின் முதலமைச்சராக யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் நீடித்ததில்லை. இப்படி இருக்கையில் யோகி ஆதித்யநாத் 6 ஆண்டுகளை கடந்து முதலமைச்சராக நீடித்து வருகிறார். இது அம்மாநிலத்தில் புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த சாதனையை கொண்டாடும் விதமாக பல்வேறு திட்டங்களை யோகி அறிவித்து வருகிறார். அதேபோல ஏற்கனவே அறிவிக்கப்பட்டு முடிக்கப்பட்ட திட்டங்களையும் தொடக்கி வைத்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் அதாவது, "உத்தரப் பிரதேசத்தில் கல்விக்கு என அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 880 அரசு தொடக்கப்பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளை மேம்படுத்த முதற் கட்டமாக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 4,000 அபியுதயா கூட்டுப் பள்ளிகளை உருவாக்கவும் அரசு திட்டமிட்டிருக்கிறது.
இதன் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் மாநில அரசு தரமான கல்வியை உறுதி செய்யும். ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சுமார் ரூ.1.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது நிஜமாகவே மிகப்பெரிய தொகையாகும். அதேபோல 704 பள்ளிகள் அடுத்தக்கட்டத்திற்கு தரம் உயர்த்தப்படுகின்றன. தேசிய கல்விக்கொள்கையில் குறிப்பிட்டுள்ளபடி குழந்தைகளின் திறன் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள நடுநிலை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையானது மிகவும் குறைந்த அளவில் இருக்கிறது.
ஆனால் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம் ஒவ்வொரு நடுநிலை பள்ளிகளிலும் சுமார் 450 மாணவர்கள் பயிலும் அளவுக்கு பள்ளிகள் மேம்படுத்தப்படும். சத்துணவுத் திட்டம், வைஃபை & ஆன்லைன் சிசிடிவி கண்காணிப்பு, விளையாட்டு மைதானத்துடன் கூடிய பல செயல்பாட்டுக் கூடம் மற்றும் நவீன தீயணைப்பு கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் பள்ளிகள் மேம்படுத்தப்படும். தொடக்க கல்வியை தவிர உயர்கல்வியை மேம்படுத்தவும் பாஜக அரசு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.
நாங்கள் கடந்த பட்ஜெட் கூட்டத்தில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைப்போம் என்று கூறியிருந்தோம். நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா இதற்கான திட்ட வரைவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆக நாங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். எதிர்காலத்தில் முதலீடு செய்கிறோம். எனவே எங்களை மக்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற செய்வார்கள். டபுள் என்ஜின் என்கிற அமைப்பையும் தாண்டி ட்ரிபிள் என்ஜின் ஆட்சி உத்தரப் பிரதேசத்தில் அமையும்" என்று கூறியுள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications