பழ ஜூசில் யூரின் கலந்து விற்ற கடைக்காரர்.. விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு காத்திருந்த ஷாக்
லக்னோ: காசியாபாத்தில் உள்ள சாலையோர ஜூஸ் கடையில், வாடிக்கையாளர்களுக்கு ஜூஸ் உடன் யூரின் கலந்து விற்பனை செய்யப்பட்டது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கடை உரிமையாளரையும் கடையில் வேலை பார்க்கும் 15 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஜூஸ் கடை ஒன்று உள்ளது. சாலையோரம் அமைந்துள்ள இந்த ஜூஸ் கடையில் வெயிலுக்கு இதமாக ஆரஞ்ச், எலுமிச்சை ஜூஸ்கள் போட்டு விற்பனை செய்து வருகிறார்கள். இந்தக் கடையில் 15 வயது சிறுவன் ஒருவன் வேலை செய்து வருகிறான்.

கடையில் ஜூஸ் குடிக்க வரும் வாடிக்கையாளர்கள், ஜூஸில் மஞ்சள் நிறத்தில் திரவம் ஒன்றை கலப்பதை கவனித்துள்ளனர். வழக்கத்திற்கு மாறாக ஜூஸில் என்ன கலக்கப்படுகிறது என பார்த்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது ஜூசில் சிறுநீர் கலக்கப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் ஜூஸ் கடையில் சென்று சோதனை செய்தனர். அப்போது கடைக்காரர் பிளாஸ்டிக் பாட்டிலில் சிறுநீரை பிடித்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக கடை உரிமையாளரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதேபோல கடையில் வேலை பார்த்த 15 வயது சிறுவனையும் போலீசார் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். ஜூஸில் சிறு நீர் கலந்து கொடுக்கப்பட்டது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இதற்கிடையே, ஜூஸில் சிறுநீர் கலந்து கொடுத்த தகவல் கிடைத்ததும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கடையில் வேலை பார்ப்பவர்களை தாக்கினர். இது தொடர்பான காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரி அன்கூர் விஹார் பாஸ்கர் கூறுகையில், "உள்ளூர் மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கடை உரிமையாளரான அமீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடையில் போலீசார் நடத்திய சோதனையில் யூரின் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் டப்பாக்கள் கைப்பற்றப்பட்டது. கடை உரிமையாளரிடம் இதுபற்றி விசாரித்து வருகிறோம்" என்றார்.
ஜூஸ் உடன் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும் போது பெரும் அதிர்ச்சியாக உள்ளது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தெலுங்கானாவில் ஐஸ்கிரீம் கடையில் விற்பனையாளர் சுயஇன்பம் செய்து விந்தணுவை ஐஸ்கிரீம் உடன் கலந்து கொடுத்த வீடியோ வைரல் ஆனது.
இணையத்தில் இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை கொடுத்தது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அடிக்கடி சாலையோர கடைகளில் சோதனை நடத்த வேண்டும் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications