நுபுர் சர்மாவை தொடர்ந்து.. நபிகள் நாயகம் மீது அவதூறு கருத்தை பரப்பிய கான்பூர் பாஜக நிர்வாகி கைது
லக்னோ: இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்தை தெரிவித்ததாக கான்பூரை சேர்ந்த பாஜக தலைவர் ஹர்ஹித் ஸ்ரீவத்சவா கைது செய்யப்பட்டார்.
பாஜகவின் செய்தித் தொடர்பாளராக பதவி வகித்து வந்தவர் நுபுர் சர்மா. இவர் அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஞானவாபி வழக்கு குறித்து விவாதத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் இஸ்லாமியர்களின் இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் மோசமான கருத்துகளை நுபுர் சர்மா தெரிவித்திருந்தார். இது பெரிய சரச்சையை ஏற்படுத்தியது.

கருத்து
இதனிடையே இவரது கருத்தை நியாயப்படுத்தினார் டெல்லி பாஜக நிர்வாகி நவீன் ஜிந்தால்.. இதையடுத்து இருவருக்கும் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இருவரையும் பாஜக தலைமை பதவி நீக்கம் செய்தது. இந்தியாவை ஆளும் கட்சியை சேர்ந்த தலைவர்கள் நபிகள் நாயகத்திற்கு எதிராக பேசியதற்கு அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்திய தூதர்
இதற்காக இந்தியாவின் தூதருக்கு குவைத், கத்தார், ஈரான், பஹ்ரைன், சவுதி உள்ளிட்ட அரசுகள் சம்மன் அனுப்பின. மேலும் குவைத் அரசோ இந்திய அரசு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. சவூதியில் இந்திய பொருட்களின் விற்பனை முடக்கப்பட்டது. இந்திய பொருட்களை புறக்கணிக்கவும் அரபு நாடுகள் முன் வந்துவிட்டன.

நுபுர் சர்மா
இந்த நிலையில் நுபுர் சர்மாவின் கருத்தை கண்டித்து உத்தரப்பிரதேசம் கான்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை முஸ்லீம் அமைப்புகள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதையும் மீறி கான்பூர் பரேட் சந்தையில் கடைகள் திறந்திருந்ததால் கடைகளை மூடுமாறு முஸ்லீம் அமைப்பினர் வலியுறுத்தினர்.

கான்பூர் வன்முறை
ஆனால் கடைகளை மூட உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 100 க்கும் மேற்பட்டோர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் கலலரம் வெடித்தது. பின்னர் தகவலறிந்த போலீஸார் போராட்ட களத்திற்கு வந்து தடியடி நடத்தி கட்டுப்படுத்தினர். எனினும் அடுத்த நாளும் இந்த வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து 1000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

கான்பூர் பாஜக நிர்வாகி கைது
இந்த நிலையில் கான்பூரை சேர்ந்த பாஜக இளைஞரணி உறுப்பினர் ஹர்ஷித். இவர் கான்பூர் மோதலை தொடர்ந்து நபிகள் நாயகத்தை அவதூறாக விமர்சித்து ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதை அவர் டெலிட் செய்துவிட்டார். இதையடுத்து போலீஸார் ஹர்ஷித்தை கைது செய்தனர். உ.பி. அரசின் கொள்கையின்படி மத கலவரத்தை தூண்டி சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications