கொடிது கொடிது வறுமை கொடிது... உத்தரபிரதேசத்தில் 6 வயது மகளை கொன்ற தாய் கைது
உத்தரபிரதேச மாநிலத்தில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி வறுமையில் வாடிய பெண் ஒருவர் தனது 6 வயது மகளை கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் நிதி நெருக்கடி, குடும்பத்தை நடத்த வருமானம் இல்லாமல் வறுமையில் சிக்கித் தவித்த பெண் ஒருவர் தனது 6 வயது மகளை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெண் குழந்தைகள் பிறந்த உடனே கொலை செய்யப்படும் சம்பவம் இன்றும் பல மாநிலங்களில் அரங்கேறி வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் வறுமையின் பிடியில் சிக்கிய பெண் ஒருவர் தனது மகளை கொலை செய்து விட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் உஷா தேவி என்பதாகும். கொரோனா காலத்தில் ஏழை, நடுத்தர மக்கள் பலரும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்த பெண்ணின் குடும்பமும் வறுமைக்கு தப்பவில்லை.
கணவன் நோயில் விழா உஷா தேவியின் வருமானத்தில்தான் குடும்பம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. கணவர், இரண்டு மகன்கள் ஒரு மகள் என ஐந்து பேரின் பசியை போக்க பகீரத பிரயத்தனம் செய்தும் வருமானம் போதவில்லை. பல நாட்கள் பட்டினி கிடக்க வேண்டியதாகி விட்டது.
பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு என்ன செய்வது? எப்படி திருமணம் செய்து கொடுப்பது என்று நினைத்து கலங்கினார் உஷா தேவி. மனதை கல்லாக்கிக்கொண்டு மகளின் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதி விட்டார் உஷா தேவி.
இந்த சம்பவம் ஹேண்டியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெஸ்கி கிராமத்தில் நடந்துள்ளது. நடந்த சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறையினர் அந்த பெண், வறுமையால் மனம் குழப்பத்தில் ஆழ்ந்திருந்ததாகவும் கூறியுள்ளனர். மகளை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இப்போது குடும்பத்தில் 3 பேர் பசியோடு தவித்து வருகின்றனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications