உ. பியில் வேலைவாய்ப்புக்கான திட்டங்கள் படிப்படியாக செயல்பட தொடங்கியுள்ளன.. யோகி ஆதித்யநாத் பேச்சு
லக்னோ: இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ரூ.36 லட்சம் கோடிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த முதலீட்டு திட்டங்களுக்கு உத்தரப் பிரதேச அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் படிப்படியாக செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, "பாஜக ஆட்சியின் இரண்டாவது உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு இந்த ஆண்டு தொடக்கத்தில் லக்னோவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் சுமார் ரூ.36 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. நல்ல சட்டம் ஒழுங்கு நிலைமை, நல்ல உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள், பாதுகாப்பு சூழல் போன்றவற்றின் விளைவாக இந்த முதலீடு வருகின்றன. மாநிலத்தில் இணைப்பு வசதிகள் மேம்பட்டுள்ளது. உள்நாட்டு நீர்வழிப் பாதைகளைக் கொண்ட முதல் மாநிலம் உத்தரப் பிரதேசமாகும்.

நாங்கள் மாநிலத்தில் விமான இணைப்பை மேம்படுத்தியுள்ளோம். உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2017ம் ஆண்டுக்கு முன்பு இரண்டு விமான நிலையங்கள் மட்டுமே செயல்பட்டன, அதே மாநிலத்தில் இப்போது ஒன்பது முழுமையாக செயல்படும் விமான நிலையங்கள் உள்ளன. இது தவிர மேலும் 12 புதிய விமான நிலையங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 5 விமான நிலையங்கள் திறக்கப்படும். மேலும், சரக்கு ஏற்றுமதிக்கு வழி வகுக்கும் மாநில உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் விரைவில் அமைக்கப்படும்.
நமது இளைஞர்களை தொழில்நுட்ப ரீதியாக திறமையானவர்களாக மாற்ற நாம் ஒன்றுபட வேண்டும். மாநிலமும், மத்தியமும் இந்த திசையில் உணர்திறனுடன் செயல்படுகின்றன. இளைஞர்களிடம் அரசின் அனைத்து திட்டங்களைப் பற்றிய தகவல்களும் இருக்க வேண்டும். Adverb நிறுவனங்களுடன் கைகோர்க்க வேண்டும், ஏனெனில் இதன் மூலம் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும். தற்போது புதிய திட்டங்கள் செயல்பட தொடங்கியுள்ள நிலையில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications