ஓடும் ரயிலுக்கு கீழ் சிக்கிய 1 வயது குழந்தை.. பதறிய பெற்றோர்.. ஆச்சர்யமாக உயிர் தப்பிய வீடியோ!
உத்தர பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தை ஒன்று ஆச்சர்யமாக உயிர் பிழைத்து இருக்கிறது.
Recommended Video

லக்னோ: உத்தர பிரதேசத்தில் ரயில் செல்லும் நேரத்தில், தண்டவாளத்தில் விழுந்த குழந்தை ஒன்று ஆச்சர்யமாக உயிர் பிழைத்து இருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த குழந்தைக்கு 1 வயதுதான் ஆகிறது.
இந்த குழந்தை ரயில் தண்டவாளத்தில் விழுந்ததும், ரயில் அவளுக்கு மேலாக சென்றதும் வீடியோவாக வெளியாகி உள்ளது.

மண்டியிட்டு விழுந்தது
அந்த குழந்தை முதலில் ரயில்வே பிளாட்பாரத்தில் மண்டியிட்டு விளையாடி உள்ளது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பிளாட்பாரம் விளிம்பிற்கு சென்று பின் அங்கிருந்து கீழே தண்டவாளத்தில் விழுந்துள்ளது. தண்டவாளத்திற்கும் பிளாட்பார்மிற்கும் இடையில் உள்ள பகுதியில் அந்த குழந்தை சிக்கியது.

சரியாக ரயில் வந்தது
இதை பார்த்ததும் அந்த குழந்தையின் பெற்றோர் பதறி அடித்துக் கொண்டு ஓடி இருக்கிறார்கள். ஆனால் அதற்குள் அங்கு ரயில் வந்துவிட்டது. அந்த குழந்தைக்கு மேலாக அந்த ரயில் வேகமாக சென்றுள்ளது.
|
ஒன்றும் ஆகவில்லை
இதை பார்த்ததும் அந்த குழந்தையின் பெற்றோர் பயந்து, நடுங்கி ''ஓ'' என்று கத்தினார்கள். ஆனால் ரயில் சென்று முடிக்கும் வரை எதுவும் செய்ய முடியாது என்பதால், ரயில் செல்லும் வரை எல்லோரும் காத்திருக்க வேண்டிய நிலை ஆகிவிட்டது. இந்த நிலையில் ரயில் சென்ற பின் அந்த குழந்தையை தூக்கினார்கள்.

ஆச்சர்யம்
இந்த விபத்தில் அந்த குழந்தை அதிசயமாக உயிர் தப்பியது. அந்த குழந்தைக்கு இந்த விபத்தில் சிறு காயம் கூட ஏற்படவில்லை. இந்த ஆச்சர்யமான சம்பவத்தை அடுத்து அந்த குழந்தையை அங்கிருந்த எல்லோரும் தூக்கி வைத்து உற்சாகமாக கொண்டாடிக் கொண்டு இருந்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications