அது பாட்டுக்கு ஒருபக்கம் நடக்கும்.. நான் பாட்டுக்கு என் பணியில் கவனம் செலுத்துகிறேன்.. பிரியங்கா
லக்னோ: கணவர் மீதான அமலாக்கத் துறை விசாரணை பாட்டுக்கு ஒரு பக்கம் நடக்கட்டும். நான் என் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையினர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச மாநில பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்ட பிரியங்கா, கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில் ராஜஸ்தானில் நில மோசடி செய்ததாக நேற்றைய தினம் அதன் தலைநகர் ஜெய்ப்பூரில் விசாரணை நடைபெற்றது. அவருடன் அவரது தாய் மௌரீன் வத்ராவும் உடனிருந்தார். ராபர்ட் வத்ராவிடம் 8 மணிநேரத்துக்கும் மேலாக அமலாக்கத் துறையினர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அமலாக்கத் துறை
இதனிடையே கட்சி அலுவலகத்தில் 16 மணிநேரத்துக்கும் மேல் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தை நடத்திவிட்டு வெளியே வந்த அவரிடம், வத்ராவிடம் அமலாக்கத் துறை நடத்தும் விசாரணை உங்கள் பணிகளை பாதிக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

கட்சியினர் ஆர்வம்
அதற்கு பிரியங்கா கூறுகையில் விசாரணை பாட்டுக்கு ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்கும். நான் பாட்டுக்கு என் வேலைகளில் கவனம் செலுத்துகிறேன். கட்சியினரின் ஆர்வத்தை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.

ஆலோசனைகள்
எனக்காக பல நாட்களாக அவர்கள் காத்திருந்தனர். அதற்கு அவர்களுக்கு நன்றி. கட்சி குறித்து நான் மேலும் மேலும் கற்று வருகிறேன். தேர்தலில் மற்றவர்களை வீழ்த்துவது குறித்து கட்சியினரிடம் ஆலோசனைகளை பெற்றேன்.

பிரியங்கா காந்தி
உத்தரப்பிரதேச மாநில லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியான தொகுதிகளை வெல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் என்றார் பிரியங்கா காந்தி. நேற்று முன் தினம் பிரியங்கா காந்தி மிகப் பெரிய பேரணியை நடத்தினார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications