மோடிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிடாதது ஏன்? முதல்முறையாக மனம் திறந்த பிரியங்கா காந்தி
லக்னோ: பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் போட்டியிடாதது ஏன் என்ற கேள்விக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தங்கையும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி, பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயார் என அறிவித்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அனுமதித்தால் போட்டியிடுவேன் என பிரியங்கா காந்தி கூறினார். இதனால் பாஜகவினர் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியினரும் பிரியங்காவின் பேட்டியை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் வாரணாசியில் வேட்பு மனுதாக்கலுக்கு நாள்கள் நெருங்கிய நிலையில் பிரியங்காவை போட்டியிட அனுமதிப்பது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இறுதியில் ராகுலிடம் பிரியங்கா பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வாரணாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர் மனுதாக்கல் செய்தார்.
இந்நிலையில் வாரணாசியில் போட்டியிடாதது ஏன் என்ற கேள்விக்கு பதில அளித்த பிரியங்கா காந்தி, "எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் சக காங்கிரஸ் நிர்வாகிகள் எனக்கு காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளிலும் முழுபொறுப்பு இருப்பதாக கூறி என்னிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனால் நான் ஒரே ஒரு தொகுதியில் கவனம் செலுத்தினால் வேட்பாளர்கள் ஏமாற்றம் அடைவார்கள் எனபதை உணர்ந்தேன். அதனால் வாரணாசியில் போட்டியிடவில்லை" என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications